கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நலத்திட்டம் – வழிகாட்டுதல் குழு அமைப்பு!!
தமிழகத்தில் கொரோனா தொற்றால் தங்களது பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளை காக்கும் வகையில் தமிழக அரசு நல திட்டங்களை அறிவித்தது. தற்போது இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.
வழிகாட்டுதல் குழு:
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று தாக்கத்தினால் அவதிப்பட்டு வரும் மக்களை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் அரிசி அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் நிவாரண நிதி ரூ.4000 (ரூ.2000 + ரூ.2000) மற்றும் 14 மளிகை பொருட்கள் நிவாரணமாக வழங்கப்படும் என்றும் அறிவித்தது. தற்போது அதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் கூட்டுறவு வங்கி நகைக்கடன் ரத்து அரசாணை – விரைவில் வெளியீடு!!
மேலும் கொரோனாவின் இரண்டாம் அலையில் பல குழந்தைகள் தங்களது பெற்றோரை இழந்து தவித்து வருகின்றனர். அந்த குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கடந்த மே மாதம் 29ம் தேதி அன்று பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார். இந்த திட்டம் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளின் எதிர்கால உயர் கல்வி வரை அவர்களை காக்கும் விதத்தில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
தமிழக முதல்வரின் இத்தகைய அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது நல திட்டங்களை செயல்படுத்துவதற்கு வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு நிதித்துறை செயலாளர் குழு தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சமூக நலன் சத்துணவு திட்டத்துறை செயலாளர், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலாளர், சமூக நலத்துறை ஆணையர் உள்ளிட்டோர் வழிகாட்டுதல் குழுவில் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.