தமிழகத்தில் 1.07 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் – முதல்வர் அறிவிப்பு!
கோவை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பங்கேற்று மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் புதிய திட்ட பணிகளுக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நலத்திட்ட பணிகள்:
தமிழகத்தில் தற்போது ஆட்சி பெறுப்பில் உள்ள திமுக அரசு சட்ட மன்றத் தேர்தலின் போது மக்களுக்கு பல்வேறு வகையான வாக்குறுதிகளை அளித்தது. அதன் படி ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொரு வாக்குறுதிகளையும் திட்டங்களாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் இன்று கோயம்புத்தூர் மாவட்டம் ஈச்சனாரியில் நடைபெற்ற அரசு விழாவில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 32 பயனாளிகளுக்கு முதல்வர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நலத்திட்டங்களுக்கு சுமார் ரூ. 588 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மேலும் மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத் துறை, மாவட்ட முன்னோடி வங்கி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் உள்ளிட்ட துறைகள் சார்பில் பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, கூட்டுறவுத்துறை, கோவை மாநகராட்சி, பள்ளி கல்வித்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, பேரூராட்சிகள் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார்.
தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு – அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து பொதுப்பணித்துறை, கோவை மாநகராட்சி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஆகியவற்றின் மூலம் ரூ.272 கோடியில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். மேலும் முதல்வர் அடுத்ததாக ஈரோடு செல்லவுள்ளார். கோபிசெட்டிபாளையம் கள்ளிப்பட்டி யில் கலைஞர் முழு உருவ சிலையை திறந்து வைக்க உள்ளார். அதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 26ம் தேதி ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ள விழாவில் பங்கேற்க உள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்