தமிழகத்தில் வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை – அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலை தீவிரமாக பரவியது. இதனால் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதனை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கொரோனா பரவும் விகிதம் கட்டுப்படுத்தப்பட்டது. கொரோனா தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டது.
இன்று முதல் பள்ளிகள் திறப்பு – ஆண் ஆசிரியர்கள் பள்ளிக்கு திரும்ப உத்தரவு!
கொரோனா இரண்டாம் அலையை தொடர்ந்து 3ம் அலை பரவும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதனை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. நாட்டில் கேரள மாநிலத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. எனவே கேரள எல்லையில் உள்ள தமிழகத்தின் மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கேரள எல்லையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமும் 5GB டேட்டா – BSNL வழங்கும் அசத்தலான திட்டம்!
தமிழகத்தின் சில பகுதிகளில் தடுப்பூசி முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. செப்டம்பர் 12ம் தேதி அமைக்கப்பட்ட மெகா தடுப்பூசி முகாம்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து நாளையும் தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் நடத்துவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டு வரும் அனைத்து ஊழியர்களுக்கும் வாரத்திற்கு ஒரு நாள் சுழற்சி முறையில் விடுமுறை அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.