இனி வெள்ளிக்கிழமைகளில் அரசு பள்ளிகளுக்கு வாராந்திர விடுமுறை? முக்கிய தகவல் வெளியீடு!

0
இனி வெள்ளிக்கிழமைகளில் அரசு பள்ளிகளுக்கு வாராந்திர விடுமுறை? முக்கிய தகவல் வெளியீடு!
இனி வெள்ளிக்கிழமைகளில் அரசு பள்ளிகளுக்கு வாராந்திர விடுமுறை? முக்கிய தகவல் வெளியீடு!
இனி வெள்ளிக்கிழமைகளில் அரசு பள்ளிகளுக்கு வாராந்திர விடுமுறை? முக்கிய தகவல் வெளியீடு!

ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாரா மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் வாராந்திர விடுமுறை ஞாயிற்றுக்கிழமைக்குப் பதிலாக வெள்ளிக்கிழமை என்று அதிகாரிகளின் அனுமதியின்றி மாற்றப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை வாராந்திர விடுமுறை:

ஜார்கண்ட் மாநிலம் தும்காவில் உள்ள 33 க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் உருது பள்ளிகளாக மாற்றப்பட்டதாக முன்பு சர்ச்சை வெடித்த நிலையில் தற்போது வார விடுமுறை ஞாயிற்றுக்கிழமைக்குப் பதிலாக வெள்ளிக்கிழமை மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் சொந்த ஊரான தும்காவில் உள்ள 33 அரசு பள்ளிகள், அப்பகுதியில் உள்ள இஸ்லாமியர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பல மாற்றங்களை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த அரசு பள்ளிகள் அனைத்தும் உருது பள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளன.

Exams Daily Mobile App Download

மேலும் வார விடுமுறை நாட்களான ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக இஸ்லாமியர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வெள்ளிக்கிழமையாக மாற்றப்பட்டுள்ளன. இந்த பிரச்சனை குறித்து பள்ளிக்கல்வி துறை கவனத்தில் எடுத்துள்ளதாக தும்காவின் பள்ளிக்கல்வித்துறை தலைவர் சஞ்சய் குமார் தாஸ் தெரிவித்துள்ளார். மேலும் சஞ்சய் குமார் தாஸ் அவர்கள், குற்றம் சாட்டப்பட்ட 33 பள்ளிகளுக்கும் நாங்கள் கடிதம் எழுதியுள்ளோம். இந்த நிறுவனங்களுடன் எவ்வாறு உருது இணைக்கப்பட்டது மற்றும் எந்த நிபந்தனையின் கீழ் அரசு பள்ளிகளில் ஞாயிற்றுகிழமைக்கு பதிலாக வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறினார்.

சென்னையில் ஜூலை 19 (நாளை) மின்தடை அறிவிப்பு – மின் வாரியம் தகவல்!

மேலும் தகவலின்படி, தும்காவின் ஷிகாரிபாரா பிளாக்கில் உள்ள 10 அரசு பள்ளிகள், ரணிஷ்வர் பிளாக்கில் உள்ள 8 பள்ளிகள், சராயஹாட் பிளாக்கில் உள்ள 7 பள்ளிகள், ஐமா பிளாக் மற்றும் ஜர்முண்டி பிளாக்கில் உள்ள 2 பள்ளிகள், கதிகுண்ட் பிளாக் மற்றும் தும்கா பிளாக் ஆகிய பள்ளிகள் ஞாயிற்றுக்கிழமைக்குப் பதிலாக வெள்ளிக்கிழமையை வார விடுமுறையாக மாற்றியுள்ளன. இதற்கிடையில், இந்த விவகாரத்தில் அரசியல் குழப்பம் தொடங்கியுள்ளது.

ஹேமந்த் சோரன் தலைமையிலான மாநில அரசு மாற்றங்களை அனுமதிப்பதாக முன்னாள் முதல்வர்கள் பாபுலால் மராண்டி, ரகுபர் தாஸ், மாநில பாஜக தலைவர் தீபக் பிரகாஷ், பாஜக எம்பி நிஷிகாந்த் துபே உள்ளிட்ட பல பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சமீபத்தில் ஜம்தாரா மாவட்டத்தில் உள்ள சுமார் 40 பள்ளிகள் இதே பிரச்சனையால் ஜூலை 12 அன்று வெள்ளிக்கிழமைக்கு பதிலாக ஞாயிற்றுக்கிழமைக்கு திரும்புவதாக எழுத்துப்பூர்வமாக தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!