பள்ளி மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் வார விடுமுறை? முக்கிய உத்தரவு!
33 அரசு பள்ளிகளுக்கு ஞாயிற்றுக்கிழமைக்குப் பதிலாக வெள்ளிக்கிழமையே வார விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வார விடுமுறை அளித்த 33 அரசுப் பள்ளிகள் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
விசாரணை உத்தரவு:
ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் சுமார் 33 அரசுப்பள்ளிகள், வெள்ளிக்கிழமையை வாராந்திர விடுமுறை நாளாக துறையின் அனுமதியின்றி மாற்றியுள்ளன. மேலும் பள்ளிகளின் பெயர்களுக்குப் பின்னால் “உருது பள்ளி” என்றும் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது அரசிடம் உரிய அனுமதி பெறாமல் இந்த பள்ளிகள் தன்னிச்சையாக வார விடுமுறை மாற்றத்தை செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிகள் விளக்கம் கேட்டு, சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
Exams Daily Mobile App Download
இதேபோல் எத்தனை பள்ளிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என மாவட்ட கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.இது குறித்து பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறியது, இந்த குறிப்பிட்ட பள்ளிகளில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் சிறுபான்மையின சமூகத்தை சேர்ந்தவர்கள். அதனால், இந்தி அல்லது உருது மொழியில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. இதனால் சிறுபான்மையின மாணவர்களுக்கு ஏற்றார்போல் வெள்ளிக்கிழமையை வார விடுமுறையாக மாற்றியுள்ளனர்.
தமிழக மீனவர் நலத்துறையில் உதவியாளர் வேலைவாய்ப்பு – ரூ.50400/- சம்பளம் || நிரந்தர பணிவாய்ப்பு !
மேலும் பள்ளியில் சனிக்கிழமை வாரத்தின் முதல் நாளாக கருதப்படுகிறது” என்று கூறினார். சில நாட்களுக்கு முன்பு, சிறுபான்மையின மக்கள் அதிகம் வசிக்கும் சில பகுதிகளில் உள்ள பள்ளிகளில் வெள்ளிக்கிழமை வார விடுமுறையாக மாற்றப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் மாநில கல்வித்துறை அமைச்சர் ஜெகன்நாத் மஹ்டோ கூறியிருந்தார். மேலும் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் சொந்த மாவட்டமான தும்கா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.