தமிழகத்தில் மீண்டும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்? தகவல் வெளியீடு!
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பெருந்தொற்று அதிகமாக பரவி வருகிறது. அவ்வாறு தொற்று பரவல் அதிகரித்து வருவதால் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
வார நாட்களில் ஊரடங்கு:
தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொரோனா 2 வது அலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் தொற்று நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. இத்தகைய ஓமைக்ரான் தொற்றை தொடர்ந்து கொரோனா பெருந்தொற்றும் வேகமெடுத்து பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறப்பு – முக்கிய கோரிக்கை! அரசின் முடிவு என்ன?
அதன்படி தமிழகத்தில் தற்போது தினசரி பாதிப்பு 25 ஆயிரத்துக்கும் மேல் பதிவாகி வருகிறது. அதனால் கடந்த ஜன.6ம் தேதி முதல் தினசரி நாட்களில் இரவுநேர ஊரடங்கும், ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த ஜன.9ம் தேதி ஞாயிற்று கிழமையும், ஜன.16ம் தேதி ஞாயிற்று கிழமையும் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது வரும் ஜன.23ம் தேதி ஞாயிற்று கிழமையும் முழு ஊரடங்கு அமல்படுத்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
IPL 2022: அகமதாபாத் அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் – ரசிகர்கள் உற்சாகம்!
ஏனெனில் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் வாரத்தின் இறுதி நாட்களில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் தமிழகத்தில் அதனை பின்பற்ற ஆலோசனை நடைபெற்று வருகிறது. எனவே விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.