வார இறுதிநாள் & இரவு நேர முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!!
உத்தரபிரதேசம் மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதிநாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இரவு ஊரடங்கு அமல்:
நாடு முழுவதும் கொரோனா பரவல் சற்று குறையத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பல மாநிலங்களில் தளர்வுகள் வழங்கப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு வருகிறது. உத்தரபிரதேசம் மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அதன் காரணமாக கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் ஜூன் 14 முதல் பள்ளிகள் திறப்பு – தலைமை ஆசிரியர்களுக்கு செயல்முறைகள்!
இருந்த போதிலும் பல நகரங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக கடைபிடிக்கப்பட்டுள்ளன. இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை வார நாட்களில் இரு ஊரடங்கு அமலில் இருக்கும். அதே போல வார இறுதி நாட்களில் வெள்ளிக்கிழமை மாலை 7 மணி முதல் திங்கள் காலை 7 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
உத்தரபிரதேசத்தில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கொரோனா காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளார். தொடர்ந்து இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதிநாள் ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள், முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தேர்வுகள், மருத்துவ தொடர்பான சேவைகள், அரசு நடத்தும் பொது வாகனங்கள் (50% திறன் கொண்டவை) மற்றும் அவசர சுகாதார சேவைகள் ஆகியவை ஊரடங்கின் போதும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.