வார இறுதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து – மாநில அரசு அதிரடி நடவடிக்கை!
கர்நாடக மாநிலத்தில் ஓமிக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நடைமுறையில் இருந்து வார இறுதி ஊரடங்கு உத்தரவை ரத்து செய்வதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் பள்ளிகளை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு:
இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் முதல் ஓமிக்ரான் வைரஸ் தொற்று பரவி தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த இந்த உருமாறிய ஓமிக்ரான் தொற்று முதன் முதலில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. அங்கிருந்து இந்திய மாநிலம் கர்நாடகா வந்த இருவருக்கு முதலில் ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து பலருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி தெலுங்கானா என அடுத்தடுத்த மாநிலங்களில் ஓமைக்ரான் வேகமெடுத்து வருகிறது.
ஜன.24 முதல் பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு – மாநில அரசு அறிவிப்பு!
அதனால் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பு பணிகள் விரைவுபடுத்தப்பட்டு வருகிறது. தற்போது பரவி வரும் இந்த வைரஸ் ஓமிக்ரான் டெல்டாவை வைரஸ் போல அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றெனு மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். இதனால் மக்கள் பாதிப்பில் இருந்து காத்துக் கொள்ள விரைவாக தடுப்பூசிகளை செலுத்தி கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தி வருகிறது. தற்போது 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் பூஸ்டர் எனப்படும் 3ம் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பில் முறைகேடு – முதல்வர் அதிரடி உத்தரவு!
தடுப்பூசிகள் இந்தியாவில் 90 கோடி மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தில் தற்போது நடைமுறையில் இருந்த வார இறுதி ஊரடங்கு உத்தரவை மாநில அரசு ரத்து செய்ததாக அறிவித்துள்ளது. பெங்களூர் நகரை தவிர பிற மாவட்டங்களில் பள்ளிகளை திறக்கலாம். மேலும் பிற இடங்களில் பள்ளியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5ஐ தாண்டினால் அந்த பள்ளிகள் மூடப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்தால் வார இறுதி ஊரடங்கு உத்தரவு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது.