கொரோனா காரணமாக வார இறுதி ஊரடங்கு தொடரும் – மாநில அரசு அறிவிப்பு!
நாடு முழுவதும் தற்போது பரவி வரும் கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று காரணமாக இரவுநேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு என கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தொடர் ஊரடங்கு:
நாடு முழுவதும் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று 2 ஆண்டுகளை கடந்த நிலையில் இன்னும் தொடர்ந்து பரவி வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் பெருமளவு குறைந்திருந்தது. இதற்கிடையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் தொற்று தென் ஆப்பிரிக்காவை தொடர்ந்து இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. அதனால் நாடு முழுவதும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் பிப்ரவரி 1 முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு – மேலாண்மை ஆணையம் வலியுறுத்தல்!
அதன்படி இந்தியாவின் தலைநகரான டெல்லியிலும் கூடுதல் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. அதாவது இரவுநேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடைகள், திரையரங்குகள் மற்றும் அரசு, தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டவைகளில் 50% பேர் கொண்டு இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பரவல் சற்று குறைந்து காணப்படுவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் தகவல் வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு – புதுப்பிக்க மீண்டும் வாய்ப்பு! மார்ச் 1 கடைசி நாள்!
அவ்வாறு கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதால் டெல்லி முதலமைச்சர் அவர்கள் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஒற்றை, இரட்டைப்படை அடிப்படையில் கடைகள் திறப்பது, 50% ஊழியர்களுடன் தனியார் நிறுவனங்கள் இயங்குவது மற்றும் வார இறுதி ஊரடங்கில் தளர்வு அளிப்பது குறித்து டெல்லி துணை ஆளுநர் அவர்களிடம் ஒப்புதல் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்துள்ள துணை ஆளுநர் அவர்கள் தனியார் நிறுவனங்கள் 50% ஊழியர்களுடன் இயங்குவதற்கு மட்டும் ஒப்புதல் அளித்தும், மற்ற தளர்வுகளுக்கு மறுப்பும் தெரிவித்துள்ளார். அதனால் வார இறுதி ஊரடங்கு டெல்லியில் தொடரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.