தமிழக மக்களே உஷார்… அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

0
தமிழக மக்களே உஷார்... அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்!
தமிழக மக்களே உஷார்... அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்!
தமிழக மக்களே உஷார்… அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை தகவல்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய போது பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கியது. இதில் குறிப்பாக சென்னையில் விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இதில் குறிப்பாக மயிலாடுதுறைக்கு அருகில் சீர்காழியில் வரலாறு காணாத மழை பெய்து வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் மழையின் அளவு நவ.17 முதல் 23ஆம் தேதி வரை தொடக்கத்தை விட குறைவாக உள்ளது.

Follow our Instagram for more Latest Updates

இதையடுத்து பனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது அடுத்த 5 தினங்களுக்கான வானிலை நிலவரம் குறித்த அறிக்கையை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இன்று முதல் 29ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ ஆகிய பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வாக்காளர் பதிவு கட்டாயம் – அதிரடி உத்தரவு!!

Exams Daily Mobile App Download

மேலும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் 25 முதல் டிசம்பர் 8 வரை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை குறைவாக இருக்கும் என்றும் அதன் பிறகு மழையின் அளவு அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!