தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!
தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் மழை பெய்ததை தொடர்ந்து, அடுத்த 4 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை தகவல்
தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கிவிட்டதால் பெரும்பான்மையான மாவட்டங்களில் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. இந்த நிலையில் அடுத்த 5 தினங்களுக்கான வானிலை நிலவரம் குறித்த அறிவிக்கையை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. இதில், தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவக்கூடும்.
இதன் காரணமாக இன்று முதல் வருகிற 20ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, வருகிற 21, 22ம் தேதிகளில் கடலோர தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மீன்வர்களுக்கான எச்சரிக்கை ஏதும் வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.