தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வெப்பநிலை – சென்னை வானிலை மையம் தகவல்!

0
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வெப்பநிலை - சென்னை வானிலை மையம் தகவல்!
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வெப்பநிலை - சென்னை வானிலை மையம் தகவல்!
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வெப்பநிலை – சென்னை வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் தற்போது பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலையும் மற்றும் காலை நேரங்களில் பனிப்பொழிவும் காணப்படுகிறது. இந்த நிலையில் அடுத்த 4 நாட்களுக்கான வானிலை அறிவிப்பு குறித்து சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

வானிலை தகவல்:

தமிழகத்தில் கடந்த ஆண்டு மாண்டாஸ் புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிப்பை சந்தித்தன. மேலும் பெரும்பாலான பயிர் நிலங்கள் சேதமடைந்தன. இதையடுத்து தற்போது பருவமழை காலம் முடிந்து குளிர்காலம் தொடங்கியுள்ளது. அதன்படி தற்போது, தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அதிகாலை வேளையில் பனிப்பொழிவு காணப்படுவதுடன் பகல் நேரங்களில் வறண்ட வானிலையும் நிலவி வருகிறது.

கேரள பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு – இனி இந்த வார்த்தைகளை பயன்படுத்த தடை!!

இதையடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 4 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் வருகிற பிப்ரவரி 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸ்‌ இருக்கக்கூடும்‌ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் அறிவிக்கப்படவில்லை.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!