உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்னும் 4 நாட்களுக்கு கனமழை தான் – வானிலை மையம் தகவல்!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்று தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்திற்கு மேலும் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை தகவல்
தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் லேசான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இதையடுத்து தற்போது மன்னார் வளைகுடா பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. இது தற்போது தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
மேலும் இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மன்னார் வளைகுடா பகுதியில் சுமார் 4.5 கி.மீ உயர்ந்த காற்று சுழற்சி காற்றழுத்தமாக மாற உள்ளது. மேலும் இதே போன்று இலங்கை அருகேயும், கிழக்கு வங்க கடல் பகுதியிலும், அந்தமான் பகுதியிலும் காற்று சுழற்சி உருவாகி, இவை மூன்றும் ஒன்று சேர்ந்து தமிழக கடற்கரை பகுதியை நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. இவை மூன்றும் மன்னார் வளைகுடா பகுதியில் உருவாகிய காற்று சுழற்சியுடன் இன்று இணைந்து தமிழக கடற்கரை பகுதியை நோக்கி நகரும்.
ஆதாரில் செய்ய கூடாத முக்கிய விஷயங்கள் – உஷார் மக்களே! UIDAI எச்சரிக்கை!
Exams Daily Mobile App Download
இதனால் தமிழகத்திற்கு இன்று நள்ளிரவு முதல் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்திற்கு கன்னியாகுமரி முதல் திருவள்ளுவர் மாவட்டம் வரை நாளை முதல் 13ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அத்துடன் இன்று ராமநாதபுரம், கடலூர், சென்னை, தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, சிவகங்கை, நாகப்பட்டினம், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.