தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக இடியுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வானிலை நிலவரம் குறித்த முழு விவரங்களையும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ளது.
வானிலை நிலவரம்:
இன்று (ஏப்ரல் 9) மற்றும் நாளை (ஏப்ரல் 10) தமிழகத்தில் உள்ள மதுரை, விருதுநகரில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 1 முதல் 2 டிகிரி செல்ஸியஸ் வரை உயரக்கூடும். மேலும் தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக வருகிற 11.04.2021 அன்று தென் தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
TN Job “FB Group” Join Now
வருகிற 11.04.2021 அன்று தென் தமிழகம், வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். மேலும் வருகிற 12.04.2021 அன்று மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
மத்திய பணியாளர் தேர்வாணைய ஆலோசனை கூட்டம் – தலைமை செயலர் டெல்லி பயணம்!!
ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியஸாக இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் எந்த பகுதியிலும் மழை பதிவாகவில்லை. மேலும் கடலுக்குள் செல்வதற்கு மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.