தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இந்த பகுதிகளில் இடி மின்னலுடன் மழை – வானிலை மையம் அறிவிப்பு!
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு பல பகுதிகளில் லேசானது முதல் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களை இந்த பதிவில் காணலாம்.
வானிலை அறிக்கை:
சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று (ஜனவரி 29) மற்றும் நாளை தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.
Follow our Twitter Page for More Latest News Updates
தொடர்ந்து பிப்ரவரி 1ம் தேதி தென்தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வெளிநாட்டில் பயிலும் இந்திய மாணவர்கள் கவனத்திற்கு – வேலை நேரம் நீட்டிப்பு… பிரதமர் ஆலோசனை!
பிப்ரவரி 2ம் தேதி தென்தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும் வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி, தூத்துக்குடி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது.