தமிழக மக்களுக்கு எச்சரிக்கை… மிக கனமழைக்கு வாய்ப்பு – இன்றைய வானிலை தகவல்!!
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை கரையை கடந்தது. இதனையடுத்து தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
வானிலை அறிக்கை:
வங்கக்கடலில் கடந்த வாரம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (பிப்.01) அதிகாலை கரையை கடந்தது. இதனால் ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் வந்தே மெட்ரோ ரயில் – மத்திய அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!
Follow our Instagram for more Latest Updates
அதனை தொடர்ந்து கன்னியாகுமரி, புதுக்கோட்டை, திருவாரூர், தென்காசி, மயிலாடுதுறை, சிவகங்கை நாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல நாளை (பிப்.03) திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தாக பிப். 4 அன்று தென் தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் பிப். 5 மற்றும் 6 ம் தேதிகளில் வறண்ட வானிலை வானிலையே நிலவக்கூடும் என்றும் வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். பிப்.2, 3, 4 ஆகிய தேதிகளில் தென்மேற்கு வங்க கடல், இலங்கை கடல் பகுதி, மன்னர் வளைகுடா பகுதிகள் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.