தமிழகத்தில் ஆகஸ்ட் 15 வரை கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!

0
தமிழகத்தில் ஆகஸ்ட் 15 வரை கனமழை கொட்டித் தீர்க்கும் - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் ஆகஸ்ட் 15 வரை கனமழை கொட்டித் தீர்க்கும் - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் ஆகஸ்ட் 15 வரை கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும்‌ வெப்பச்சலனம்‌ காரணமாக தமிழ்நாட்டில்‌ ஆகஸ்ட் 15ம் தேதி வரை கனமழை பெய்ய உள்ள மாவட்டங்களின் விபரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கையாக வெளியிட்டு உள்ளது.

வானிலை அறிக்கை:

இன்று நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன மழையும்‌, சேலம்‌, நாமக்கல்‌, வேலூர்‌, திருப்பத்தூர்‌, கள்ளக்குறிச்‌சி, விழுப்புரம்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, மயிலாடுதுறை, நாகப்பட்டினம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌ ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அனேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்ய கூடும்‌.

நீலகிரி மாவட்டத்திற்குள் நுழைய தீவிர கட்டுப்பாடுகள் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

12.08.2021: நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன மழையும்‌, சேலம்‌, நாமக்கல்‌, வேலூர்‌, திருப்பத்தூர்‌, கள்ளக்குறிச்‌சி, விழுப்புரம்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, மயிலாடுதுறை, நாகப்பட்டினம்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அனேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்ய கூடும்‌.

13.08.2021, 14.08.2021: நீலகிரி, கோயம்புத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன மழையும்‌, வட தமிழ்நாடு மாவட்டங்கள்‌, புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌, தென்‌ கடலோர மாவட்டங்களில்‌ லேசான மழையும்‌ பெய்ய கூடும்‌.

அண்ணா பல்கலை மாணவர்களுக்கு பயிற்சி வழங்க ஏற்பாடு – புதிய துணைவேந்தர் உறுதி!

15.08.2021: நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, திருப்பூர்‌, தென்காசி, திண்டுக்கல்‌ மாவட்டங்கள்‌, வட கடலோர மாவட்டங்கள்‌, அதனை ஒட்டிய உள்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌, நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்‌சியஸை ஓட்டி இருக்கும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்க கடல்‌ பகுதிகள்‌:

11.08.2021 முதல்‌ 13.08.2021 வரை: தெற்கு வங்க கடல்‌ மற்றும்‌ தெற்கு அந்தமான்‌ கடலோர பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ இடைஇடையே 60 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

இந்தியாவில் 10 வயதிலேயே புகையிலையை கையில் எடுக்கும் சிறுவர்கள் – சர்வே முடிவுகள்!

14.08.2021, 15.08.2021: தெற்கு வங்க கடல்‌, தெற்கு அந்தமான்‌ கடலோர பகுதிகள்‌, மத்திய வங்கக்‌ கடல்‌ பகுதிகளை ஓட்டிய வட தமிழகம்‌ மற்றும்‌ தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ இடைஇடையே 60 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

அரபிக்கடல்‌ பகுதிகள்‌:

11.08.2021 முதல்‌ 15.08.2021 வரை: தென்‌ மேற்கு மற்றும்‌ மத்திய மேற்கு அரபிக்கடல்‌ பகுஇகளில்‌ பலத்த காற்று மணிக்கு 50 முதல்‌ 60 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ இடைஇடையே 70 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!