செல்வம் தான் தீவிரவாதி, போலீசாரிடம் மாட்டிவிட்ட சந்தியா, சரவணன் – ‘ராஜா ராணி 2’ ப்ரோமோ ரிலீஸ்!
இத்தனை நாட்களாக சரவணனின் கடையிலேயே வேலை பார்த்துக்கொண்டு பார்வதியை கடத்தி ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த செல்வம் தான் தீவிரவாதி என்பதை அறிந்துகொண்டு சந்தியா போலீசாரிடம் மாட்டி விடும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
ராஜா ராணி:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜா ராணி தொடரில் செல்வம் தான் குற்றவாளி என்பதை பார்வதி சந்தியாவிடம் கூறுவாரா என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. அதாவது சரவணனின் கடைகளில் வேலை பார்த்துக் கொண்டே ஊர் மக்களை கொலை செய்ய செல்வம் திட்டமிட்டு கொண்டிருக்கிறார். இதற்காக பார்வதியையும் கடத்தி பார்வதியின் உடம்பு முழுக்க வெடிகுண்டை பொருத்தி திருவிழாவில் பார்வதியை விட்டுவிட்டனர். எதிர்பாராத விதமாக கால் இடறி பார்வதி கீழே விழுந்து விடுகிறார்.
Exams Daily Mobile App Download
பார்வதியின் காலில் போட்டிருந்த கொலுசை சந்தியா பார்த்துவிட்டு இது பாஸ்கர் பார்வதிகாக வாங்கி கொடுத்த கொலுசு தானே என அறிந்து பார்வதியை சந்தியா காப்பாற்றுகிறார். தனது உடம்பு முழுக்க வெடிகுண்டு இருக்கிறது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்பதால் பார்வதி யாரையும் கிட்ட நெருங்கவே விடவில்லை. பின்பு, பார்வதியின் உடலிலிருந்த அனைத்து வெடிகுண்டை எடுத்து பார்வதியை சந்தியா காப்பாற்றுகிறார். பார்வதி தன்னை பற்றிய உண்மையை கூறிவிட்டால் பெரிய பிரச்சினையாகி விடும் என செல்வம் பயப்படுகிறார்.
ராதிகாவை நேரில் சந்தித்து கண்டபடி திட்டிய பாக்கியா – சீரியலில் அடுத்த திருப்பம்! வைரலாகும் ப்ரோமோ!
இந்நிலையில் சந்தியாவிடம் பார்வதி நமது கடையில் வேலை பார்த்த செல்வம் நல்லவன் கிடையாது. அவன் தான் என்னை கடத்தி வைத்திருந்த தீவிரவாதி என அனைத்து உண்மையையும் சந்தியாவிடம் பார்வதி கூறுகிறார். உடனே, சந்தியா சரவணனை சந்தித்து செல்வத்தால் தான் குடும்பத்தில் பிரச்சனை என அனைத்து உண்மைகளையும் கூறுகிறார். உடனே, சரவணன் செல்வத்தை விரட்டியபடி செல்கிறார். சரவணனை துப்பாக்கியால் செல்வம் சுடப் போகும் நேரத்தில் சரியாக போலீசார் அனைவரும் செல்வத்தை சுற்றிவளைத்து செல்வத்தை கைது செய்கின்றனர். மீண்டும் செல்வம் போலீசாரிடம் இருந்து தப்பித்து வந்தால் கண்டிப்பாக சந்தியா சரவணனின் குடும்பத்தை செல்வம் சும்மா விடவே மாட்டான். அடுத்து என்ன நடக்கப் போகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.