தமிழகத்தில் உயர்கல்விக்கு நுழைவுத்தேர்வை அனுமதிக்க மாட்டோம் – அமைச்சர் திட்டவட்டம்!
இளங்கலை படிப்பிற்கு நுழைவுத்தேர்வு அவசியம் என யுஜிசி அறிவித்த நிலையில், தற்போது அமைச்சர் பொன்முடி ஒருபோதும் தமிழகத்தில் நுழைவுத்தேர்வை அனுமதிக்க மாட்டோம் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
நுழைவுத்தேர்வு:
2019ஆம் ஆண்டிற்கான தேசிய கல்விக் கொள்கை குறித்து திட்டக் குழுவின் வரைவு அறிக்கையில் 12 ஆம் வகுப்பு முடித்து பட்டப்படிப்பில் சேர முயற்சிக்கும் மாணவர்களுக்கு நுழைவு தேர்வு கட்டாயமாக்கப்படும் என பரிசீலனை செய்யப்பட்டது. ஏற்கனவே மருத்துவ படிப்பில் சேர நீட் மற்றும் பொறியியல் படிப்பில் சேர ஐ.ஐ.டி, என்.ஐ.டி ஜே.இ.இ போன்ற நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து இளங்கலை படிப்பிற்கும் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தமிழக அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு – 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
அதாவது நுழைவு தேர்வினை நடத்தி மாணவர்களின் திறன் அறிவு, மொழித்திறன் மற்றும் தேர்ந்தெடுக்க உள்ள சிறப்பு பாடப்பிரிவு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு நடத்தி அந்த மதிப்பெண்ணுக்கு ஏற்றார் போல பாட பிரிவுகள் வழங்கப்படலாம் என திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்திலும் உள்ள கல்லூரிகளிலும் நுழைவுத்தேர்வை அனுமதிக்கலாமா என்பது குறித்து சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர்கள் முன்னிலையில் ஆலோசனை நடத்தப்பட்டது.
8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – ரூ. 50,000/- ஊதியம்
நாடு முழுவதும் உள்ள 45 மத்திய பல்கலையில் இளநிலை கல்வி பயில பொது நுழைவுத் தேர்வு அவசியம் என்று யுஜிசி அறிவித்த நிலையில் சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி இந்த நுழைவுத் தேர்வை குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அதன்படி தமிழ்நாட்டில் ஒரு போதும் இந்த நுழைவு தேர்வை அனுமதிக்க மாட்டோம் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். முதல்வரும் ஒரு போதும் நுழைவுத்தேர்வை அனுமதிக்க மாட்டார் என கூறியுள்ளார்.