நீர் நிலை, கால்வாய் ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா வழங்க தடை – ஐகோர்ட் உத்தரவு!
தமிழகத்தில் நீர்நிலை மற்றும் கால்வாய் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். இதனால் வெள்ளப்பெருக்கு காலத்தில் உயிர் சேதம் உட்பட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் விதமாக தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பட்டா வழங்க தடை
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நீர்நிலை மற்றும் கால்வாய் இருக்கும் பகுதிகளை பொதுமக்கள் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். இதனால் தொடர்ச்சியான கனமழை மற்றும் அதனை தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது வீடுகளுக்குள் நீர் புகுந்து வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது. அத்துடன் மிகவும் தாழ்வான பகுதிகளில் இருக்கும் வீடுகள் தரை மட்டமாகின்றனர். இதனால் பல உயிர் சேதங்களும் ஏற்படுகிறது. மேலும் நீர்நிலை மற்றும் கால்வாய் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு பட்டாவும் வழங்கப்படுகிறது.
அதாவது, கால்வாய், நீர் நிலைகளை கிராம நத்தமாக மறு வகைப்படுத்தப்பட்டு பட்டா வழங்கப்பட்டு வருகிறது. கிராம நத்தம் எனப்படுவது கிராமப்புறங்களில் எதிர்காலத்தில் மக்கள் வீடுகள் கட்டிக் கொள்வதற்கு என ஒதுக்கப்பட்ட நிலமாக கருதப்படுகிறது. மேலும் இது ஒரு அரசின் சொத்தாக கருதப்பட மாட்டாது. இந்த நிலம் கிராம பஞ்சாயத்திற்கு சொந்தமானதாக கருதப்படும். அதனால் இந்த முறையை பயன்படுத்தி நீர்நிலை மற்றும் கால்வாய் பகுதிகளை ஆக்கிரமிப்பு மேற் கொண்டவர்களுக்கு சுலபமாக பட்டா கிடைக்க வழிவகை செய்யப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
இதனை தடுக்கும் விதமாக சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி உயர்நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பில், ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு பட்டா வழங்கும் வகையில் கால்வாய், நீர் நிலைகளை கிராம நத்தமாக மறு வகைப்படுத்தக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் தமிழகத்தில் நீர்நிலை மற்றும் கால்வாய் ஆக்கிரமிப்பு காரணமாக வெள்ள பாதிப்புகள் ஏற்படுவது குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் நீர் செல்லுவதற்கு சீரான பாதைகளும் உருவாகும் என்று கூறப்படுகிறது.