தமிழகத்தில் ஆண்டறிக்கை சமர்ப்பிக்காத சங்கங்களுக்கு எச்சரிக்கை – பதிவுத்துறை அதிரடி!
தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யாத சங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
பதிவுத்துறை:
தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்ற நிலையில் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் துறை சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யாத சங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பதிவுத்துறை அறிவித்து இருந்தது. தற்போது இது குறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அக்.1 முதல் புதிய கட்டண விதிமுறைகள் – வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
இதில் பல சங்கங்கள் ஒவ்வொரு நிதியாண்டிற்கும் உரிய நிதி அறிக்கைகளை உரிய காலக்கெடுவிற்குள் பதிவாளரிடம் தாக்கல் செய்யாமல் இருப்பதாகவும், சங்கங்களின் செயல்பாடுகளை கண்காணித்து முறைப்படுத்த வேண்டியது மாவட்ட பதிவாளர்களின் பணி என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் தங்களது மண்டலத்திற்குட்பட்ட பதிவு மாவட்டங்களில் ஆண்டறிக்கைகளை உரிய காலக்கெடுவிற்குள் அளிக்காமல் உள்ள அனைத்து சங்கங்களின் விவரங்கள் குறித்து, ஒருங்கிணைந்த அறிக்கை தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கல்வி நிறுவனங்களுக்கு ஓர் நற்செய்தி – காப்புரிமை கட்டணத்தில் 80% குறைப்பு!
அவ்வாறு தயாரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த அறிக்கையை வரும் 20 ஆம் தேதிக்குள் மாவட்ட பதிவாளர்கள் இடம் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஆண்டறிக்கைகள் தாக்கல் செய்யாத சங்கத்தின் பெயர், பதிவு எண், மற்றும் வசூலிக்கப்பட வேண்டிய உத்தேச அபராதத் தொகை போன்ற அனைத்து விவரங்களையும் அனுப்ப, அனைத்து மண்டல ஐஜி மற்றும் பதிவாளருக்கு பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.