தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு எச்சரிக்கை – முக்கிய விதிகள் வெளியீடு!
தமிழக மின்வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அரசு விடுத்துள்ள சீருடை விதிகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீருடை கட்டாயம்
தமிழகத்தில் மின்சாரத்துறையில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது வேலை நேரத்தில் சீருடைகளை அணிந்திருக்க வேண்டும் என்றும் இந்த விதிகளை மீறும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்வாரியத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், பணியில் இருக்கும் மின்வாரிய ஊழியர்கள் வேலை நேரத்தில் கட்டாயமாக சீருடை அணிந்திருக்க வேண்டும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் பணியின் போது பெண் ஊழியர்கள் சேலை அல்லது துப்பட்டவுடன் கூடிய உடைகளை அணிந்திருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
மேலும், பணியில் இருக்கும் ஆண்கள் பார்மல் உடைகள், வேஷ்டி மற்றும் தமிழ் அல்லது இந்திய கலாச்சாரத்தை பின்பற்றும் எந்தவிதமான உடைகளையும் அணிந்து கொள்ளலாம் என்றும் மின் வாரியம் தெரிவித்துள்ளது. அதே போல கேசுவலான எந்த உடைகளையும் பணி நேரத்தில் உடுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயத்தில் ஆஜராக வேண்டி இருந்தால், அவர்கள் முழுக் கையுடன் கூடிய சிறிய அளவிலான பட்டன்கள் வைத்த கோட்டுகளை அணிந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பல்கலைக்கழங்களில் புதிய மொழி பாடம் – உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!
இதற்கு மாற்றாக, பட்டன் இல்லாத உடைகளை அணிய விரும்பும் ஊழியர்கள் கட்டாயமாக டை அணிந்திருக்க வேண்டும் என்று மின்வாரியம் அறிவுறுத்தி இருக்கிறது. மேலும், ஊழியர்கள் அணியும் உடையின் நிறம் மற்றும் டிசைன் சாந்தமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து அலுவலகங்களில் கண்ணியம், மற்றும் ஒழுக்கத்தை கடைபிடிக்கும் விதமாக அனைத்து ஊழியர்களும் இந்த சீருடை விதிகளை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த விதிகளை மீறும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.