அதிகரிக்கும் இன்ஃபுளுயன்சா பாதிப்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை! மத்திய அரசு தகவல்!
இந்தியாவில் தற்போது புது புது வைரஸ்கள் தோன்றி மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், ஆகஸ்ட், அக்டோபர் மாதங்களில் இன்ஃபுளுயன்சா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இன்ஃபுளுயன்சா பாதிப்பு
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கொரோனா வைரஸ் தாக்கத்தில் மக்கள் சிக்கி தவித்து வந்தனர். அதன் பின் கொரோனா குறைய மக்கள் தற்போது தான் பழைய நிலைக்கு திரும்பி கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அது மட்டுமில்லாமல் பருவ மாற்ற வைரஸான இன்ஃபுளுயன்சா அதிகமாக பரவி வருகிறது. இது கொரோனா போல வேகமாக பரவக் கூடியது என்பதால் மக்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர்.
TNPSC குரூப் 4 Cut Off மதிப்பெண் எவ்வளவு? – முழு விவரம் இதோ!
இந்த நோய் தாக்கியவர்களுக்கு உடல்வலி, கடுமையான காய்ச்சல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் இந்த வைரஸால் 3பேர் உயிரிழந்து இருக்கின்றனர். அது மட்டுமில்லாமல் ஆகஸ்ட், அக்டோபர் மாதங்களில் இன்ஃபுளுயன்சா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. அதனால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
Exams Daily Mobile App Download