வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை.. நவம்பர் 1 முதல் இது கட்டாயம் – மாநில காவல்துறை உத்தரவு!
நாடு முழுவதும் அதிகரித்து வரும் சாலை விபத்துகள் காரணமாக, மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், வருகிற நவம்பர் 1 ஆம் தேதி முதல் காரில் பயணம் செய்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என அம்மாநில போக்குவரத்து காவல்துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சீட் பெல்ட் கட்டாயம்:
உலகளவில் சாலை விபத்துகளால் உயிரிழப்பவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இந்தியா இருக்கிறது. சாலை விபத்துகள் காரணமாக ஆண்டுதோறும் ஏகப்பட்ட உயிர்களை நாம் இழந்து வருகிறோம். அரசு அறிவித்துள்ள சாலை விதிமுறைகளை சரியாக கடைபிடித்தால் சாலை விபத்துகள் அதிகம் தவிர்க்கப்படும். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த மாதம் பிரபல தொழிலதிபர் சைரஸ் மிஸ்திரி சாலை விபத்தில் உயிரிழந்தார். அவர் கார் சாலை தடுப்பில் மோதிய நிலையில், பின் இருக்கையில் இருந்த அவர் சீட் பெல்ட் அணியாதது தான் உயிரிழப்பிற்கு காரணம் என்று விசாரணையில் தெரியன்வந்தது.
வாட்ஸ் அப் பயன்பாட்டில் இப்படி ஒரு விபரீதமா? – திருடப்படும் தகவல்கள் | உடனே இதை செய்யுங்க!
Exams Daily Mobile App Download
இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் மட்டுமல்லாமல் தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இது குறித்து மும்பை மாநகர போக்குவரத்து காவல் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மும்பை மாநகரில் இனி கார்களில் பயணம் செய்பவர்கள் அனைவரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
மேலும் இதற்கு தகுந்தாற் போல அனைத்து வாகன உரிமையாளர்களும் தங்களுடைய கார்களில் சீட் பெல்ட் வசதியை சரியாக இயங்கும் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும், மேலும் வாகன ஓட்டிகள், பின் சீட்டில் அமர்ந்திருப்பவர்களை கட்டாயம் சீட் பெல்ட் அணிய வலியுறுத்த வேண்டும். மேலும் இந்த அறிவிப்பை பின் பற்றாதவர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்