PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை பதிவு – இதை செய்யாவிட்டால் கணக்கு முடக்கம்!

0
PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை பதிவு - இதை செய்யாவிட்டால் கணக்கு முடக்கம்!
PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை பதிவு - இதை செய்யாவிட்டால் கணக்கு முடக்கம்!
PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை பதிவு – இதை செய்யாவிட்டால் கணக்கு முடக்கம்!

EPF அமைப்பு தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், புதிய விதிகளின்படி, ஊழியர் பிஎஃப் கணக்கில் இருந்து 36 மாதங்களுக்கு எந்த பரிவர்த்தனையும் இல்லை என்றால், இபிஎஃப் கணக்கு செயலிழந்து போகும் என குறிப்பிட்டுள்ளது. இதனால் உறுப்பினர்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

எச்சரிக்கை பதிவு:

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி என்பது ஓய்வூதிய சேமிப்பு திட்டமாகும். இது ஊழியர்களுக்கான நீண்ட கால சேமிப்பு திட்டமாகும். தொழிலாளர் மற்றும் நிறுவனம் சேர்ந்து EPF நிதிக்கு பங்களிப்பு செய்கிறார்கள். மேலும், வருங்கால வைப்பு நிதியில் பங்களிப்பு செய்வது தொழிலாளரின் விருப்பம் ஆகும். சேமிக்கப்படும் தொகை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) டெபாசிட் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பல சமயங்களில் போதுமான தகவல் இல்லாததாலும் சில தவறுகள் காரணமாகவும் ஊழியர்களின் PF கணக்கு கணக்கு மூடப்பட்டு விடும். எனவே PF உறுப்பினர்கள் இத்தகைய தவறை செய்யக்கூடாது.

Exams Daily Mobile App Download

ஊழியர் ஒருவர் பணிபுரிந்த நிறுவனத்தில் இருந்து புதிய நிறுவனத்திற்கு மாறும் போது, PF கணக்கை மாற்றாமல் இருந்து, பழைய நிறுவனம் மூடப்பட்டால், அதாவது அதில் பணம் போடப்படவில்லை என்றால், PF கணக்கு மூடப்படும்.இதனால் அத்தகைய கணக்குகள் ‘செயல்படாத’ பிரிவில் சேர்கிறது.’செயல்படாத’ கணக்காக மாறிய கணக்கில், பரிவர்த்தனை செய்ய முடியாது.எனவே கணக்கை மீண்டும் செயல்பட வைக்க, PF அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். மேலும் கணக்கு ‘செயல்படாத’ நிலைக்கு சென்றாலும், கணக்கில் இருக்கும் பணத்திற்கு வட்டி தொடர்ந்து கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

கணக்கு எப்போது ‘செயல்படாத’ நிலைக்கு செல்லும்:
  • A- ஓய்வு பெற்று 36 மாதங்கள் ஆன பிறகும், உறுப்பினர் 55 வயதை அடையும் போது
  • B- உறுப்பினர் நிரந்தரமாக வெளிநாட்டில் குடியேறும் போது
  • C – உறுப்பினர் இறந்துவிட்டால்
  • D- உறுப்பினர் முழு ஓய்வூதிய நிதியையும் திரும்பப் பெற்றிருந்தால்
  • E- 7 ஆண்டுகளாக யாரும் எந்த பிஎஃப் கணக்கையும் கோரவில்லை என்றால், இந்த நிதி மூத்த குடிமக்கள் நல நிதியில் சேர்க்கப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!