தமிழக பள்ளி மாணவர்களுக்கான எச்சரிக்கை அறிவிப்பு – ‘இதை’ செய்தால் நடவடிக்கை!

0
தமிழக பள்ளி மாணவர்களுக்கான எச்சரிக்கை அறிவிப்பு - 'இதை' செய்தால் நடவடிக்கை!
தமிழக பள்ளி மாணவர்களுக்கான எச்சரிக்கை அறிவிப்பு - 'இதை' செய்தால் நடவடிக்கை!
தமிழக பள்ளி மாணவர்களுக்கான எச்சரிக்கை அறிவிப்பு – ‘இதை’ செய்தால் நடவடிக்கை!

தமிழகத்தில் உள்ள அரசு, மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் அக்கறை கொள்ள வேண்டும் எனவும், சில ஒழுக்கக்கட்ட நடவடிக்கைகளை அமல்படுத்தும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கான எச்சரிக்கை

மாணவர்கள் பள்ளிக்கு வரும்போதே மொபைல் போன் கொண்டு வருவது வழக்கமாகிவிட்டது. இதனால், ஒரு பள்ளிகள் மொபைல் போன் கொண்டு வரும் மாணவனுக்கு தண்டனை கொடுக்கின்றனர். மேலும், ஒரு சில பள்ளிகள் மாணவர்களை கண்டுகொள்வதில்லை. இந்நிலையில், பள்ளிக்கு மொபைல் போன் கொண்டு வந்தால் அந்த மொபைல் பறிமுதல் செய்யபடும் எனவும், திரும்ப கொடுக்கப்படாது எனவும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், பிள்ளைகள் பள்ளிக்கு மொபைல் போன் கொண்டு வருவதை பெற்றோர்கள் கவனித்து பிள்ளைக்கு அறிவுரைகள் வழங்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக பொறியியல் கல்லூரிகளுக்கான எச்சரிக்கை – அண்ணா பல்கலை முக்கிய அறிவிப்பு!

இது மட்டுமல்லாமல், மாணவர்கள் மொபைல் போன் கொண்டு வந்திருக்கிறார்களா என்பதை ஆசிரியர்கள் சுழற்சி முறையில் கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் பள்ளிக்கு வரும் போது பேருந்து படிக்கட்டுகளில் நின்று கொண்டோ, தொங்கியபடியோ பயணம் செய்ய கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் பள்ளிகளில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதால் ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் வகுப்பறையில் இருக்க கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, வகுப்பு ஆசிரியர் விடுமுறை என்றாலும் கூட வேறு ஆசிரியரின் கண்காணிப்பில் தான் மாணவர்கள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்பு, உணவு இடைவெளிகளில் மாணவர்கள் கூட்டமாக அமர்ந்து சாப்பிடுவதை தவிர்த்து பாதுகாப்பான இடத்தில் தனித்தனியே அமர்ந்து சாப்பிடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தனியார் பேருந்து வாகன ஓட்டுனர்கள் மாணவர்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனவும், மாணவர்கள் பள்ளியில் எந்த தகவலும் தெரிவிக்காமல் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுப்பு எடுத்தாலும் கூட பெற்றோரிடம் ஆசிரியர்கள் விசாரிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த விவரங்களை பள்ளி பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் எனவும், மாணவ, மாணவியரின் ஒழுக்க நடைமுறைகளில் எந்தவித சமரசமும் செய்ய கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!