பேடிஎம் (Paytm) பயனர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு – பணமோசடி!!
நாட்டில் தற்போதைய காலத்தில் ஆன்லைன் மூலம் பணமோசடி குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் பேடிஎம் செயலி பெயரில் நடைபெற்று வரும் மோசடிகளை தவிர்க்கும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
பேடிஎம்:
நாட்டில் கடந்த மூன்று மாத காலத்திற்கும் மேலாக கொரோனா பேரிடர் காலத்தில் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மேலும் கொரோனாவினால் தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காரணத்தினால் பல தரப்பு மக்கள் வருமானமின்றி தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். தற்போது அவர்களை பாதுகாக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நிவாரணங்களை வழங்கி வருகிறது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் நாட்டில் ஆன்லைன் பணமோசடி குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முன்பு போன் நம்பருக்கு குறுஞ்செய்தி மூலம் போலியான இணையதளங்கள்மோசடி செயல்களில் ஈடுபட்டு வந்தனர். தற்போது பேடிஎம் செயலியின் பெயர் மூலம் பணமோசடி நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன்படி பேடிஎம் என்ற பெயரைக் குறிப்பிட்டு வரும் அந்த மெசேஜில் paytmcashoffer.com என்ற வெப்சைட் இருக்கிறது.
சென்னை ரிப்பன் மாளிகையில் ‘தமிழ் வாழ்க’ பெயர் பலகை – அமைச்சர்கள் திறந்து வைப்பு!!
இதனை கிளிக் செய்தால் ரூ.2,647 கேஸ்பேக் கிடைக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் அதன் கீழே ‘send gift to paytm’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ‘you have won paytm scratch card’ என்ற தகவலும் அதில் உள்ளது. அதை கிளிக் செய்து உள்ளே சென்றால் போலியான வேறொரு தளத்திற்குள் செல்கிறது. எனவே மக்கள் இது குறித்து கவனமாக செயல்பட வேண்டும் என்றும் பேடிஎம் செயலியில் கேஸ்பேக் கொடுக்கப்பட்டால் அந்த செயலி உள்ளே சென்றால் மட்டுமே கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.