SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – பரவும் போலி தகவல்! இதனை நம்ப வேண்டாம்.. ஆபத்து!

0
SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - பரவும் போலி தகவல்! இதனை நம்ப வேண்டாம்.. ஆபத்து!
SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - பரவும் போலி தகவல்! இதனை நம்ப வேண்டாம்.. ஆபத்து!
SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – பரவும் போலி தகவல்! இதனை நம்ப வேண்டாம்.. ஆபத்து!

இந்தியாவில் நாளுக்கு நாள் ஆன்லைன் பண மோசடிகள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தங்களது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

பண மோசடி:

இந்தியாவில் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகிறது. வளர்ந்துள்ள தொழில்நுட்ப வசதியால் ஆன்லைன் உதவியோடு வங்கி கணக்கில் இருந்து மற்றொரு வங்கி கணக்கிற்கு பணம் நேரடியாக மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து G PAY, PAYTM, PHONEPE போன்ற மொபைல் செயலிகள் மூலம் நீங்கள் எந்த நேரத்திலும் எங்கிருந்து வேண்டுமானாலும் பணத்தை எளிதாக அனுப்பலாம்.

Follow our Instagram for more Latest Updates

இந்த நிலையில் மோசடி கும்பல் பணம் கையாடல் செய்யும் நோக்கில் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு நூதனமாக பேசி வங்கி கணக்கு சார்ந்த விவரங்களை கைப்பற்றி விடுகின்றனர். அண்மையில் SBI வாடிக்கையாளர்கள் பான் கார்டினை அப்டேட் செய்ய வேண்டும். இல்லையென்றால் உங்களது வங்கி கணக்கு முடக்கப்படும் என்ற தகவல் பரவி வருகிறது.

அரசு வேலைவாய்ப்பில் 77% இட ஒதுக்கீடு.. மசோதா நிறைவேற்றம் – ஜார்கண்ட் அரசு அதிரடி!

Exams Daily Mobile App Download

இது குறித்து வாடிக்கையாளர்கள் வங்கியிடம் கேட்ட போது இந்த தகவல் முற்றிலும் போலியானது என்று SBI தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து வரும் எஸ்எம்எஸ் மற்றும் மெயில்களுக்கு பதிலளிக்க வேண்டாம் என்றும் வங்கி சார்ந்த விவரங்களை பகிர வேண்டாம் என்றும் SBI வங்கி அறிவுறுத்தியுள்ளது. இது போன்ற SMS-கள் வந்தால் உடனடியாக வாடிக்கையாளர்கள் 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!