ஆன்லைனில் ஆர்டர் செய்வோர் கவனத்திற்கு – காவல்துறை எச்சரிக்கை!
ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தால் வீடு தேடி வந்து பொருட்களை தரும் நபர்கள் மற்றும் நிறுவன விளம்பரங்களுக்காக வீடு தேடி வரும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆன்லைன் ஆர்டர்:
நாட்டில் வளர்ந்து வரும் இணைய பயன்பாட்டால் மோசடிகள் அதிகரித்து வருகிறது. இணையத்தில் வேலைவாய்ப்புக்காக விண்ணப்பிப்பவர்களை குறி வைத்து மோசடி கும்பல்கள் பணம் கையாடல் செய்கின்றனர். இவ்வாறான மோசடிகள் குறித்து பொதுமக்கள் புகார் அளித்து வருகின்றனர். மேலும் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் மூலம் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் நபர்களின் வங்கி கணக்கு எண்கள் மற்ற விவரங்கள் மர்ம கும்பலால் சேகரிக்கப்பட்டு மோசடிகள் நடைபெற தொடங்கியது.
அக்.1 முதல் இந்த வங்கிகளின் செக் புக் செல்லாது – PNB அறிவிப்பு!
இதனால் வங்கி பயனாளர்கள் உரிய சரியான அதிகாரபூர்வ வங்கி இணையத்தை பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. தற்போதைய கால கட்டத்தில் வீட்டில் இருந்து நாம் ஆர்டர் செய்தால் உணவு முதற்கொண்டு அனைத்துமே நாம் இருக்கும் தேடி வந்து விடும். இவ்வாறு வீட்டிற்கே வந்து பொருட்களை டெலிவரி செய்யும் நபர்கள் மற்றும் ஏதேனும் பொருட்கள் தயாரிக்கும் நிறுவங்களின் விளம்பரத்திற்காக வீடு தேடி வரும் நபர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
தமிழகத்தில் செப்.23ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இவர்கள் பொருட்களை மிக குறைந்த விலைக்கு வழங்கப்படும், பொருட்கள் வாங்கினால் பரிசுகள் வழங்கப்படும் போன்ற ஆசை வர்த்தைகளால் வீட்டுக்குள் நுழைந்து உடமைகளை கையாடல் செய்கின்றனர் அல்லது குழந்தைகளை கூட இழக்க நேரிடும், விழிப்புடன் இருக்க வேண்டும். பொருள்களை விற்பனை செய்ய வந்ததாக கூறும் நபர்களை கண்டிப்பாக வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம் என்று காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.