தமிழகத்தில் வழக்கு தொடுப்பவர்களுக்கான எச்சரிக்கை – நீதிமன்றம் அறிவிப்பு!
தமிழகத்தில் சட்டவிரோதமாக இயங்கி வரும் மதுபான பார்களுக்கு எதிரான வழக்கில் ஆதாரம் இல்லாமல் வழக்கு தொடர்ந்தால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
நீதிமன்றம் உத்தரவு:
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அனுமதி வாங்காமல் சட்டவிரோதமாக பார்கள் நடத்தப்பட்டு வருவதாக அடிக்கடி குற்றசாட்டு எழுந்து வருகிறது. அந்த வகையில் சென்னை பாடியைச் சேர்ந்த பாலசந்தர் என்பவர் சட்டவிரோத பார்கள் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் தமிழகத்தில் அனுமதி பெற்ற இடத்தை விடுத்து அனுமதியில்லாத பகுதிகளில் சட்டவிரோதமாக செயல்படும் பார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் குறிப்பிட்டிருந்தார்.
Exams Daily Mobile App Download
மேலும் அதில் சென்னையில் உள்ள மால் ஒன்றில் உள்ள மொட்டைமாடி பாரில் நடந்த விருந்தின் போது ஒருவர் மரணமடைந்ததை சுட்டிக்காட்டினார். இந்த பார்கள் மூலமாக பல சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகவும், மேலும் தீ விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அடங்கிய அமர்வு இந்த மனு குறித்து ஆதாரம் இல்லை என தெரிவித்தனர்.
மத்திய அரசின் PM கிசான் மான் தன் யோஜனா திட்டம் – மாதம் ரூ. 3000 வரை பென்ஷன் தொகை!
மேலும் ஆதாரம் இல்லாமல் மனு தாக்கல் செய்யப்பட்டதால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தனர். எந்தவித ஆதாரமும் இன்றி மனு தாக்கல் செய்யப்படக் கூடாது என நீதிபதி தெரிவித்தனர். அதன் பின் மனுவை திரும்பப் பெற மனுதாரர் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. அதன் பின் இந்த மனுவை வாபஸ் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். சட்டவிரோத பார்களுக்கு எதிரான மனுவில் நீதிமன்றம் எச்சரிக்கை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.