TNPSC தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் கவனத்திற்கு – எச்சரிக்கை பதிவு! தவறாமல் படிங்க!
தமிழ்நாடு அரசின் துறைகளுக்குத் தேவைப்படும் பணியாளர்களை அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வு செய்கிறது. மேலும் அரசுப் பணிக்கான தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் புதிய விதிமுறைகளை ‘டி.என்.பி.எஸ்.சி’ வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் TNPSC தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பெண்கள், கணவர் பெயருடன் கூடிய ஜாதி சான்றிதழ் வழங்கினால் ஏற்கப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
எச்சரிக்கை பதிவு:
தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக போட்டித் தேர்வு அறிவிப்புக்காக பலர் காத்திருந்தனர். மாநிலம் முழுவதும் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால் அமலில் இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்புகளும் வெளியாகி உள்ளது. இந்த வகையில் சமீபத்தில் TNPSC குரூப் 2, குரூப் 4 போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி, பலரும் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் விண்ணப்பத்தார்களுக்கான முக்கிய வழிகாட்டுதல்களை TNPSC தெரிவித்துள்ளது. அதன்படி, ஜாதி சான்றிதழை பொறுத்தவரை, பழைய அட்டை வடிவிலான சான்றிதழ் இருந்தால் போதுமானது என்று தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
மேலும் தற்போது வழங்கப்படும் ‘ஆன்லைன்’ வழி சான்றிதழும் ஏற்றுக் கொள்ளப்படும். ஆன்லைன் சான்றிதழ் வைத்துள்ளோர், அட்டை வடிவ சான்றிதழ் பெற வேண்டியதில்லை. ஜாதி சான்றிதழில் கணவர் பெயர் அல்லது கணவர் சார்ந்த ஜாதி பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தால், அந்த சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படாது என அறிவித்துள்ளது. பெற்றோர் கலப்பு திருமணம் செய்திருந்தால், தந்தை அல்லது தாய் சார்ந்த ஜாதி பெயரில், சான்றிதழ் பெறலாம். இதை அடுத்து ஜாதி சான்றிதழில், தந்தை பெயர் திருத்தப்பட்டு இருந்தால், பெயர் மாற்றம் குறித்து, அரசிதழ் பதிவின் அடிப்படையில் ஏற்கப்படும். ஏற்கனவே வைத்திருந்த ஜாதி சான்றிதழ் தொலைந்து, புதிய சான்றிதழ் பெற்றிருந்தாலும் ஏற்றுக் கொள்ளப்படும் என கூறப்பட்டு உள்ளது.
இந்நிலையில் TNPSC தேர்வுக்கு பல பெண் தேர்வர்கள் விண்ணப்பித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களில் பலர் திருமணமானவராக இருந்தால், அவர்களுக்கு சில இடங்களில் கணவர் பெயருடன் ஜாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது. அவர்கள், டி.என்.பி.எஸ்.சி., பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டால், தந்தை பெயர் இல்லாமல், கணவர் பெயர் உள்ள ஜாதி சான்றிதழ்கள், இடஒதுக்கீடு முறைக்கு ஏற்கப்படுவதில்லை. எனவே, ஜாதி சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் திருமணமான பெண்கள், அவர்களின் தந்தை பெயருடன் சேர்த்து சான்றிதழ் வழங்குமாறு, வருவாய்த் துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.