தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – எச்சரிக்கை அறிவிப்பு! முழு விபரங்கள் இதோ!
1973ம் ஆம் ஆண்டு குற்றவியல் நடத்தை சட்டத்தின் படி, அரசு ஊழியர்கள் கணவன் மனைவி உயிருடன் இருக்கும் போது, வேறு ஒரு திருமணம் செய்ய கூடாது. இருப்பினும் இரண்டு தார மணம் புரியும் அரசு ஊழியர்கள் மீது குற்றவியல் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கபடும் என அரசாணை வெளியாகி உள்ளது.
அதிரடி உத்தரவு:
அரசால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நல திட்டங்களை, மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அதிக பங்கு வகிப்பது அரசு ஊழியர்கள் தான். தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அரசு ஊழியர்களை போற்றும் விதமாக, பல சலுகைகளை தற்போதைய தமிழக அரசு வழங்கி வருகிறது. அரசு ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து கொரோனா காலகட்டத்தில், நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமலில் இருந்தது. இருப்பினும் அரசு பணிகளில் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் நடைபெற அரசு ஊழியர்கள் தன்னலம் பாராமல் உழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ் – காயம் காரணமாக விலகும் ரவீந்திர ஜடேஜா?
இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு தற்போது எச்சரிக்கை அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது முதல் மனைவி/ கணவன் உயிரோடு இருக்கும்போது, தமிழக அரசு ஊழியர்கள் இரண்டாவது திருமணம் செய்யக் கூடாது என அரசு எச்சரித்துள்ளது. துணை உயிருடன் இருக்கும் போது அரசு ஊழியர்கள் இரண்டாம் திருமணம் செய்வது தண்டனைக்குரிய குற்றம். உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் 1973 இன் படி, அரசுப்பணியாளர்கள் முதல் மனைவி அல்லது கணவர் இருக்கும் போது இரண்டாவதாக ஒருவரை மணம் புரிந்தாலோ அல்லது வேறு தவறான நடத்தையில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
Exams Daily Mobile App Download
இது தவிர குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்படும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. கணவன் அல்லது மனைவி உயிருடன் இருக்கும் நிலையில், அவர்கள் செய்துகொள்ளும் மற்றொரு திருமணம் இந்திய தண்டணைச் சட்டம் 494ம் பிரிவின்படி தண்டனைக்குரிய குற்றம் என அரசாணையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் 2வது திருமணம் செய்வது என்பது ஒழுக்கக்கேடானது, அரசு மரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்தும் செயல் என்று அரசு தெரிவித்துள்ளது.