திருப்பதி செல்ல திட்டமிட்டவர்கள் கவனத்திற்கு – பக்தர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!

0
திருப்பதி செல்ல திட்டமிட்டவர்கள் கவனத்திற்கு - பக்தர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!
திருப்பதி செல்ல திட்டமிட்டவர்கள் கவனத்திற்கு - பக்தர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!
திருப்பதி செல்ல திட்டமிட்டவர்கள் கவனத்திற்கு – பக்தர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தற்போது இலவச தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நாளுக்கு நாள் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. ஆனால் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் வனப்பகுதியில் இருந்து பாம்புகள் அடிக்கடி அலிபிரி நடைபாதைக்கு வருகிறது. அதனால் பக்தர்களுக்கு தேவஸ்தானம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பக்தர்கள் கவனத்திற்கு

ஆந்திர மாநிலத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற திருப்பதி கோவிலில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வெளிநாடுகளிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் வருகை புரிவார்கள். அதனால் கொரோனா கால கட்டத்தில் பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பக்தர்களுக்கு அமல்படுத்தப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – வங்கி நிர்வாகத்தின் எச்சரிக்கை அறிவிப்பு!

அதன்படி கோவிலுக்கு பக்தர்கள் வழக்கம் போல வருகை புரிந்து வருகின்றனர். இந்நிலையில் கோடை காலம் தொடங்கியுள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது கோடை காலம் என்பதால் அலிபிரி நடைபாதைக்கு பாம்புகள் அடிக்கடி படையெடுத்து வருகின்றன. இதில் குறிப்பாக அலிபிரி நடைபாதை அருகே 10 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று வந்து படமெடுத்து ஆடியதை பார்த்த பக்தர்கள் அலறியடித்து ஓடினார்கள்.

Exams Daily Mobile App Download

இந்த பாம்பை பிடித்து காவலாளி அலுவலக கண்காணிப்பாளர் சங்கராச்சாரி சேஷாசலம் வனப்பகுதியில் விட்டார். மேலும் இது தொடர்பாக இவர் கூறியதாவது, தற்போது கோடைகாலம் என்பதால் வனப்பகுதியில் இருந்து பாம்புகள் அடிக்கடி அலிபிரி நடைபாதைக்கு வருகிறது. அதனால் பக்தர்கள் நடைபாதையில் கவனமாக நடக்க வேண்டும் என்றும் காட்டுக்குள் செல்ல கூடாது என்றும் பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதனால் திருப்பதி செல்லும் பக்தர்கள் நடைபாதையில் கவனமாக செல்ல வேண்டும் ஏதேனும் பாம்பு தென்பட்டால் தேவஸ்தானத்திற்கு புகார் தெரிவிக்கலாம் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!