SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – வங்கி நிர்வாகத்தின் எச்சரிக்கை அறிவிப்பு!

0
SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - வங்கி நிர்வாகத்தின் எச்சரிக்கை அறிவிப்பு!
SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - வங்கி நிர்வாகத்தின் எச்சரிக்கை அறிவிப்பு!
SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – வங்கி நிர்வாகத்தின் எச்சரிக்கை அறிவிப்பு!

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்களின் தனிப்பட்ட அல்லது வங்கி விவரங்களை கேட்கும் மின்னஞ்சல்கள் அல்லது எஸ்எம்எஸ்களுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று எஸ்பிஐ கணக்கு வைத்திருப்பவர்களை அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

அதிர்ச்சி தகவல்:

மத்திய அரசின் ஊடகப் பிரிவு, பிரஸ் இன்ஃபர்மேஷன் பியூரோ அல்லது பிஐபி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் வாடிக்கையாளர்களின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக கூறி, புழக்கத்தில் உள்ள போலி எஸ்எம்எஸ் குறித்து எச்சரித்துள்ளது. இந்த மோசடி நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில், தனிப்பட்ட அல்லது வங்கி விவரங்களைப் பகிருமாறு கேட்கும் மின்னஞ்சல்கள் அல்லது எஸ்எம்எஸ்களுக்குப் பதிலளிக்க வேண்டாம் என்று எஸ்பிஐ கணக்கு வைத்திருப்பவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

மத்திய அரசின் PM KISAN திட்டத்தில் தவணைத்தொகை கிடையாது – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

“உங்கள் @TheOfficialSBI கணக்கு தடுக்கப்பட்டுள்ளது என்று பரவி வரும் ஒரு செய்தி மோசடியானது ஆகும்”. இந்த மோசடி நடவடிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக மத்திய அரசின் ஊடகப் பிரிவு, பிரஸ் இன்ஃபர்மேஷன் பியூரோ தனது அதிகாரபூர்வ ட்விட்டர் தளத்தில் உங்கள் தனிப்பட்ட அல்லது வங்கி விவரங்களை கேட்கும் மின்னஞ்சல்கள் / SMSகளுக்கு பதிலளிக்க வேண்டாம். அப்படி ஏதேனும் செய்தி வந்தால், உடனடியாக [email protected] இல் புகாரளிக்கவும் என்று தெரிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியும் தொடர்ந்து போலி எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல்களுக்கு எதிராக எச்சரித்து வருகிறது.

Exams Daily Mobile App Download

மேலும், “யாராவது உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து மோசடியாக பணம் எடுத்திருந்தால், உடனடியாக உங்கள் வங்கிக்குத் தெரிவிக்கவும்” என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்துகிறது. மத்திய வங்கி மார்ச் மாதம் வெளியிட்ட விழிப்புணர்வு கையேட்டில் மோசடி செய்பவர்கள் தங்கள் வணிகத்தை எவ்வாறு செய்கிறர்கள் மற்றும் அவர்களைத் தடுக்க வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை குறிப்பிட்டுள்ளது. பொதுத்துறை வங்கி கடந்த மாதம் வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐயில் இருந்து வரும் போலி செய்திகள் குறித்து தகவல் தெரிவித்திருந்தது. குறிப்பாக வாடிக்கையாளர் தகவல்களைப் பெற எஸ்பிஐ ஒருபோதும் மின்னஞ்சல் அனுப்புவதில்லை. உங்கள் பயனர் பெயர் அல்லது கடவுச்சொல் அல்லது வேறு ஏதேனும் தனிப்பட்ட தகவலைச் சேகரிக்க SBI ன் மின்னஞ்சலைப் பெற்றால் உடனடியாக புகாரளிக்கவும். இது மோசடியானதாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!