SBI வங்கி வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு – முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு!
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் மேற்கொள்பவர்கள் வங்கியின் அறிவுறுத்தல்களை கடைபிடிக்குமாறு தெரிவித்துள்ளது.
எஸ்பிஐ:
தற்போதைய நவீன உலகில் அனைத்து வேலைகளும் இணையத்தளம் வாயிலாக செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக வங்கி பண பரிவர்த்தனைகள் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்று வருகிறது. தற்போது ஒரு சில முக்கிய தேவைகளுக்காக மட்டுமே வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த நேரத்தில் மோசடி கும்பல் பணம் கையாடல் செய்யும் முயற்சிகளிலும் ஈடுபட்டனர். வங்கிகளில் இருந்து பேசுவது போல் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு வங்கி சார்ந்த விவரங்களை திரட்டினார்கள். இதனை வைத்து எளிதாக வங்கி கணக்கில் இருந்து பணத்தை கையாடல் செய்கின்றனர்.
தமிழக சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு – இன்னும் 2 நாள் தான் இருக்கு! உடனே விண்ணப்பியுங்கள்!
மேலும் போலி இணையத்தளங்களை உருவாக்கி அதன் லிங்கை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி அதன் மூலம் எளிதாக வாடிக்கையாளர்களின் கணக்கு ஏடிஎம் பின் நம்பர் உள்ளிட்ட விவரங்களை பெறுகின்றனர் . இது குறித்து பாதிக்கப்பட்டோர் ஏராளமானோர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ அறியப்படாத மூலங்களிலிருந்து வரும் செய்திகளில் செயல்பட வேண்டாம் என்று வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது. மேலும் பாஸ்வேர்டை புதுப்பிக்க, கேயுசி விவரங்களை புதுப்பிக்க இது போன்ற லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம்.
Exams Daily Mobile App Download
அவற்றை செயல்படுத்துவதற்கு முன் அந்த செய்திகளைச் சரிபார்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. #SafeWithSBI என்ற ஹேஷ் டேக்குடன் எஸ்பிஐ இந்த செய்தியை தனது வாடிக்கையாளர்களுக்காக பகிர்ந்துள்ளது. தேவையின்றி யாருக்கும் எந்தவொரு தனிப்பட்ட தகவலையும் குறுஞ்செய்தி மூலம் வெளியிட வேண்டாம் என்றும் கணக்கு எண்கள், பாஸ்வேர்ட் போன்றவை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். ஃபோன் கால் மூலமாகவோ, மெசேஜ் மூலகமாகவோ வங்கியை சார்ந்திராத யாரேனும் உங்களிடம் கேட்டால் அதை கூற வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.