அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு எச்சரிக்கை பதிவு – இதை செய்யாவிட்டால் சிக்கல் தான்!

0
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு எச்சரிக்கை பதிவு - இதை செய்யாவிட்டால் சிக்கல் தான்!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு எச்சரிக்கை பதிவு - இதை செய்யாவிட்டால் சிக்கல் தான்!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு எச்சரிக்கை பதிவு – இதை செய்யாவிட்டால் சிக்கல் தான்!

ரேஷன் அட்டையை பயன்படுத்தி பல்வேறு மோசடிகள் நடப்பதாக அரசின் கவனத்திற்கு பல புகார்கள் வந்துள்ளது. இந்த புகாரை கருத்தில் கொண்டு ரேஷன் விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்களை அரசு ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய விதிமுறைகள் வெளியாகி உள்ளது.

புதிய விதிகள்:

ரேஷன் கடைகள் மூலம் சாமானியர்களுக்கு மிகக் குறைந்த விலையில் உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் பொருளாதார அடிப்படையில் சர்க்கரை அட்டை, அரிசி அட்டையை பொறுத்து பொது விநியோக திட்டத்தின் கீழ், ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் அனைவரும் கட்டாயம் மாத மாதம் ரேஷன் பொருட்களை வாங்க வேண்டும். ஒருவேளை அவற்றை சரிவர தொடர்ந்து வாங்காமல் இருந்தால் அந்த ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட்டுவிடும் என்ற புதிய விதிமுறையை அரசு அறிவித்திருந்தது.

தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு? நெருக்கடியில் இளைஞர்கள்!

இதை தொடர்ந்து தற்போது மீண்டும் முக்கிய அறிவிப்பு ஓன்று வெளியாகி இருக்கிறது. கொரோனா காலகட்டத்தில் சாமானிய மக்கள் பயன்பெற இலவச ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் தற்போதும் நடைமுறையில் தான் இருக்கிறது. இந்நிலையில் அரசின் இலவச ரேஷனை பல லட்சம் தகுதியில்லாதவர்களும் பயன்படுத்தி வருவது அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. இதற்காக, தகுதியில்லாமல் ரேஷன் கார்டை வைத்திருக்கும் நபர், தாமாகவே முன்வந்து கார்டை ஒப்படைத்து விட வேண்டும் என, அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

ரேஷன் கார்டை தானே முன் வந்து ரத்து செய்யாத நிலையில், அரசு மேற்கொள்ளும் சோதனை நடவடிக்கையில் சிக்கினால், பிறகு உணவுத் துறை துறை கார்டை ரத்து செய்யும், அதோடு கார்டுதாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரேஷன் கார்டு வைத்திருப்பவர் தனது சொந்த வருமானத்தில் சம்பாதித்த 100 சதுர மீட்டர் பரப்பளவில் பிளாட் அல்லது வீடு, நான்கு சக்கர வாகனம்/டிராக்டர், ஆயுத உரிமம் ஆகியவற்றை வைத்திருந்தாலோ, குடும்ப வருமானம் கிராமத்தில் இரண்டு லட்சம் என்ற அளவிலும், நகரத்தில் ஆண்டுக்கு மூன்று லட்சத்துக்கும் அதிகமாக இருந்தாலோ, அவர்கள் இலவச ரேஷன் பெற தகுதி இல்லாதவர்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தங்கள் ரேஷன் கார்டை விரைவில் தாலுகா மற்றும் டிஎஸ்ஓ அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!