வங்கிகளில் ‘இதனை’ நாளை (செப்.01) செய்யாவிடில் கணக்கு முடக்கம் – வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

0
வங்கிகளில் 'இதனை' நாளை (செப்.01) செய்யாவிடில் கணக்கு முடக்கம் - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
வங்கிகளில் 'இதனை' நாளை (செப்.01) செய்யாவிடில் கணக்கு முடக்கம் - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
வங்கிகளில் ‘இதனை’ நாளை (செப்.01) செய்யாவிடில் கணக்கு முடக்கம் – வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

இந்தியாவில் ரிசர்வ் வங்கியின் கே ஒய் சி அப்டேஷன் கடந்த மார்ச் 2022க்குள் அப்டேட் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கி,அவர்களது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

பஞ்சாப் வங்கி:

இந்தியாவில் தற்போது அதிக அளவிலான மக்களை வங்கி சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் வங்கிகள் மக்களுக்கு தேவையான நேரத்தில் கடன் உதவிகளை குறைந்த வட்டியில் வழங்குவதால் மக்கள் அதிகம் வங்கிகளையே நாடுகின்றனர். இந்த நிலையில் வங்கிகளின் கணக்குகளை வைத்து பண மோசடிகள் அதிகம் நடைபெறுவதாக புகார்கள் எழுந்து வருகின்றது. இதனை தடுக்கும் விதமாக மத்திய ரிசர்வ் வங்கி கே ஒய் சி அப்டேஷன் கடந்த மார்ச் 2022க்குள் அப்டேட் செய்ய வேண்டும் என்று அறிவித்தது.

அரசு ஊழியர்களுக்கு ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஹாப்பி நியூஸ் – கேரள அரசு அதிரடி அறிவிப்பு!

மேலும் மக்களின் வசதிக்காக இதற்கான கால கெடுவை ஆகஸ்ட் 31 வரை நீடித்து உத்தரவிட்டிருந்தது. மேலும் இந்த காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில் வாடிக்கையாளர்கள் ஆகஸ்ட் 31-க்குள் கட்டாயம் கேஓய்சி-யினை அப்டேட் செய்ய வேண்டும் என பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது ஆகஸ்ட் 31-க்குள் கே ஒய் சி அப்டேஷன் செய்யாவிடில் உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும் என்று வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதை அடுத்து வாடிக்கையாளர்கள் கே ஓய் சி அப்டேஷனை செய்த பிறகு முடக்கப்பட்ட வங்கி கணக்கு ஆக்டிவேட் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த கே ஓய் சி அப்டேஷனை வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்தே செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல ஏமாற்று மோசடிகள் நடப்பதால் இதில் மிக கவனமாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இதை அடுத்து ஆதாரின் மூலம் ஓடிபி கொடுத்தும் கே ஓய் சியினை அப்டேட் செய்து கொள்ளலாம். எனவே வாடிக்கையாளர்கள் விரைவில் இந்த கே ஓய் சி அப்டேஷனை செய்து பண மோசடிகளில் இருந்து தற்காத்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!