கனமழையால் பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு – மக்கள் அவதி!
கர்நாடகா மாநிலத்தில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு ஆறுகள் நிரம்பி வழிவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் அம்மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு:
கர்நாடக மாநிலத்தில் பரவலாக கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் தென்மெற்கு பருவமழையின் தாக்கம் மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக சுமார் 14 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், கடந்த 2 நாட்களாக 8 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்து வருகிறது. அதனால் குடகு மாவட்டம், உடுப்பி உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.
TNUSRB PC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் பல மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் சூழ்ந்துள்ள வெள்ளநீர்ல் அங்குள்ள பொதுமக்கள் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்கும் பணியில், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், தீயணைப்பு படையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியோர் கலந்து, மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் மரங்கள் வேரோடு சரிந்தும், மின்கம்பங்கள் சாய்ந்தும் உள்ளன. இதனை அகற்றும் பணியில் மாவட்ட நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
Exams Daily Mobile App Download
குறிப்பாக குடகு, தக்சின கன்னடா, கார்வார், சிக்கமங்களூரு, பெலகாவி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கபினி, கே.எஸ்.ஆர். அணைகளில் இருந்து சுமார் 50,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் பல இடங்களில் நீர் சூழ்ந்துள்ளது.இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறும் படி அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கனமழையானது, அடுத்த 7 நாட்களுக்கு தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.