இந்திய உணவகங்களுக்கான முக்கிய எச்சரிக்கை – ‘இதை’ செய்ய கூடாது!
இந்தியாவில் செயல்படும் உணவகங்களுக்கு மத்திய அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. மேலும் இது குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.
சேவை கட்டணம்:
இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (GST) கடந்த 2017ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் நாட்டின் அனைத்து பொருட்கள் விற்பனைக்கும் ஒரே விதமான வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. ஒரே நாடு, ஒரே வரி என்ற நோக்கத்தில் ஜிஎஸ்டி முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ஜிஎஸ்டி மூலம் 2022ம் ஆண்டு ஜூன் மாதத்தில் மட்டும் ரூ.1,44,616 கோடி வருவாய் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது கடந்த ஆண்டு ஜூன் மாத வரி வசூலைவிட 56% அதிகம். தற்போது நடைமுறையில் உள்ள ஜிஎஸ்டி கட்டணம் மூலம் விலைவாசி உயர்ந்து வருவதாக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
தமிழக மாணவிகளுக்கான 1000 ரூபாய் உதவித்தொகை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
அண்மையில் அரிசி, பருப்பு, கோதுமை, தயிர் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்களுக்கு, ஜி.எஸ்.டி வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தண்ணீர் எடுக்கும் மோட்டார் பம்புகளுக்கு ஜி.எஸ்.டி வரி 12 விழுக்காட்டில் இருந்து 18% உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்கு மத்தியில் உணவகங்களில் சேவை கட்டணம் விதிப்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. சேவை கட்டணம் விதிப்பது வழிகாட்டுதல்களை மீறுவதாகவும், நியாயமற்ற வர்த்தக நடைமுறையை உருவாக்கும் என்று அரசு கூறுகிறது. இந்த நிலையில் சேவை கட்டணம் வசூலிப்பதை அரசு தடை செய்தது. உணவகங்கள் மூலம் சேவை கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டது.
Exams Daily Mobile App Download
இவை தற்போது அமலில் உள்ளதை உறுதி செய்யுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இது தொடர்பான புகார்கள் பெறப்பட்டால், மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தி 15 நாட்களுக்குள் ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. சேவைக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக 2022 ஏப்ரல் 1 முதல் 2022 ஜூன் 20ம் தேதி வரை, 537 புகார்கள் நுகர்வோரால் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்த புகார்கள் டெல்லி, பெங்களூர், மும்பை, புனே மற்றும் காசியாபாத் ஆகிய இடங்களில் இருந்து புகார்கள் வந்துள்ளதாகவும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.