Gpay, Phonepe செயலிகள் பயன்படுத்துவோர் கவனத்திற்கு – பாதுகாப்பு வழிமுறைகள் இதோ!
இந்தியாவில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற மொபைல் போன் செயலிகள் மூலம் மக்கள் அதிகம் பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் யுபிஐ பரிவர்த்தனையைப் பாதுகாப்பாக பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதற்கான பாதுகாப்பு முறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
யுபிஐ பரிவர்த்தனை:
இந்தியாவில் பரவிய கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்தது. அதனால் பள்ளி, கல்லூரிகள், கடைகள் வணிக வளாகங்கள், வங்கிகள் போன்றவைகள் மூடப்பட்டது. இந்த நேரத்தில் வங்கிகள் மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக உள்ளதால் பகுதி நேரமாக இயக்கப்பட்டு வந்தது. இருந்தாலும் வங்கிகளால் கூட்டத்தை தவிர்க்க வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. மேலும் ஊரடங்கு காலத்தில் மக்கள் மக்கள் வீட்டை விட்டு வெளியேறாத நிலை ஏற்பட்டதால் ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்தனர்.
TNPSC Group 2 & 2A தேர்வர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை – OMR தாளை சரியாக நிரப்பும் முறை!
இந்த ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு யுபிஐ மூலம் பண பரிவர்த்தனை அதிகம் பயன்பட்டது . இந்த யுபிஐ பரிவர்த்தனை மிக பயனுள்ளதாக இருந்தாலும் இதன் மூலம் பல மோசடிகளும் நடைபெற்று வருகிறது. அதனால் யுபிஐ செயலிகள் மூலம் பண பரிமாற்றம் செய்யும் போது பலர் மொபைல் எண்ணை தான் பயன்படுத்துகிறார்கள். அதில் நாம் ஒரு எண்ணை தவறாக அழுத்தினாலும் தவறான நபர்களுக்கு பணம் சென்றுவிடும். அதனால் சோதனைக்காக முதலில் 1 ரூபாய் அனுப்பி உறுதி செய்து கொள்ளலாம்.
Exams Daily Mobile App Download
மேலும் மோசடியாளர்கள் அனுப்பும் ஏதேனும் இணைப்பைச் சிறுவர்கள் கிளிக் செய்து யுபிஐ பின் எண்ணை உள்ளிட்டால் அது உங்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது அதனால் திரைக்கு எப்போதும் பின் அல்லது பேட்டர்ன் போட்டு வைத்து கொள்வது நல்லது. யுபிஐ பின் எண் மற்றும் பிற வங்கி சார்ந்த எண்களை போனில் சேமித்து வைக்க கூடாது. பல யுபிஐ செயலிகளை பயன்படுத்தும் போது நாம் தவறான பின் எண்ணை உள்ளிட வாய்ப்புள்ளது. அதனால் தேவைக்கு அதிகமான யுபிஐ செயலிகளை பயன்படுத்த வேண்டாம். யுபிஐ செயலிகளை பயன்படுத்துபவர்கள் தினமும் தங்களுக்கு வரும் எஸ்எம்எஸ்-களை செக் செய்ய வேண்டும்.