தமிழக வாக்காளர்கள் கவனத்திற்கு – நவ.26ம் தேதி சிறப்பு முகாம்! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
வேலூர் மாவட்டத்தில் 651 மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் நீக்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் சிறப்பு முகாம் நடைபெற்றது. அடுத்த கட்ட முகாம் நடத்தப்படும் தேதியும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு முகாம்:
இந்தியாவில் முக்கிய அடையாள ஆவணமான வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று கடந்த ஜூலை மாதம் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து ஆகஸ்ட் மாதம் முதல் வாக்காளர் – ஆதார் இணைப்பு பணிகள் நடைபெற தொடங்கியது. அதனை தொடர்ந்து இனி 17 வயது நிரம்பியவர்கள் முன் கூட்டியே வாக்காளர் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் வாக்குச்சாவடி மையங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு புதிய வாக்காளர் அட்டை பெற பெயர், முகவரி உள்ளிட்டவைகளை மாற்றம் செய்தல், இறந்தவர்களின் சான்றிதழ் சமர்ப்பித்து அவர்களை பட்டியலில் இருந்து நீக்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.
தாய்மொழியில் கல்வி கற்பதே சிறந்தது – குடியரசுத் தலைவர் அறிவுறுத்தல்!
Follow our Instagram for more Latest Updates
அதே போல நடப்பாண்டும் வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று (நவ.11) வேலூர் மாவட்டத்தில் 651 மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் மற்றும் சிறப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அடுத்த கட்ட முகாம் நவ. 26, 27 ஆகிய தேதிகளிலும் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.