ஆதாருடன் வாக்காளர் அட்டையை இணைத்து விட்டீர்களா? ஆட்சியர் வெளியிட்ட தகவல்!
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த மாவட்டத்தில் இத்தனை பேர் ஆதாருடன் வாக்காளர் அட்டையை இணைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
ஆதார் அட்டை
வாக்காளர் பட்டியலில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகளை தவிர்ப்பதற்கு ஆதாருடன் வாக்காளர் அட்டையை கட்டாயமாக இணைக்க வேண்டும் என அகில இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி இதற்கான பணிகள் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அனைத்து பகுதிகளிலும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து நீங்கள் ஆதார் எண்ணை இணைக்க விரும்பவில்லையெனில் வாக்காளர் குடும்ப அட்டை, வங்கி கணக்கு எண் உள்ளிட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை இணைத்து கொள்ளலாம்.
Follow our Instagram for more Latest Updates
இந்த நடவடிக்கையானது ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போலி வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பதை தவிர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை நீங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் நேரடியாக சென்று அவரின் கருடா கைபேசி செயலி மூலமாகவும் மற்றும் 6B படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிபதன் மூலமாகவும் இணைக்கலாம். மேலும் வாக்காளர்கள் www.nvsp.in என்ற இணையதளத்தை பயன்படுத்தியோ அல்லது Voters Helpline App என்ற ஆப் மூலமாகவோ ஆன்லைன் முறையில் இணைக்கலாம்.
இந்தியாவில் புதிய ரூபாய் நோட்டுகளில் லட்சுமி மற்றும் விநாயகரின் படங்கள் – முதல்வரின் வலியுறுத்தல்!
Exams Daily Mobile App Download
இதற்கான பணிகள் தமிழகம் முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 65 சதவீதம் வாக்காளர்கள் ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்து உள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்