தமிழகத்தில் வாக்காளர் & ஆதார் அட்டை இணைப்பு – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
இந்தியாவின் குடியுரிமை ஆவணங்களில் ஒன்றாக விளங்கும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இது குறித்து ஆலோசனை செய்ய தமிழகத்தில் ஆகஸ்ட் 2ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
வாக்காளர் அட்டை – ஆதார் எண்:
இந்தியாவில் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்படுகிறது. இதற்காக குடிமக்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் சார்பாக வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. தற்போது 17 வயது நிரம்பியவர்களும் முன்கூட்டியே வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பிக்கலாம் 18 வயது ஆகும் வரை காத்திருக்க தேவையில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து முக்கிய ஆவணங்களில் ஒன்றாக விளங்கும் ஆதார் எண்ணுடன் இந்த வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த பணியானது நாளை (01.08.2022) முதல் நாடு முழுவதும் தொடங்கப்படவுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு 2023 க்குள் முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்தில் ஆகஸ்ட் 2ம் தேதி ஆதார் வாக்காளர் அடையாள எண் இணைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டமானது தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 9 கட்சிகள் கலந்து கொள்ள தலைமை தேர்தல் அதிகாரி சார்பில் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
Post Office ல் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு! முழு விவரம் இதோ
தற்போது இரட்டை பெயர் பதிவு, ஒரே வாக்காளர் பெயர் பல இடங்களில் பதிவாகி இருக்கும் இது போன்ற குழப்பங்கள் ஏற்படுவதை தடுக்கவே வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தொடங்கப்படும் ஆதார் எண் இணைப்பு பணிகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் விளம்பரம் அளிக்கப்பட வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதனை தொடர்ந்து வரும் செப்டம்பர் மாதம் வாக்காளர் பட்டியலில் திருத்தம் 18 வயது முடிந்தவர்கள் தங்களது பெயர்களை புதிதாக சேர்க்கும் பணிகள் வழக்கம் போல் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் குட் ஐடியா
அரசுக்கு நன்றி