தமிழகத்தில் வாக்காளர் & ஆதார் அட்டை இணைப்பு – செப்.4 சிறப்பு முகாம்!
இந்தியாவின் குடியுரிமை ஆவணங்களில் ஒன்றாக விளங்கும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு ஆதார் – வாக்காளர் இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
ஆதார் கார்டு:
இந்தியாவில் 12 இலக்க எண்களை கொண்ட ஆதார் அட்டையை மத்திய ஆதார் அமைச்சகம் வழங்கி வருகிறது. இது ஒவ்வொரு குடிமகனின் அடையாளமாக விளங்குகிறது. இந்த ஆதார் அட்டை அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கும், வங்கி பண பரிவர்த்தனைகள், சிம் கார்டு வாங்குதல், கேஸ் இணைப்பு பெறுதல் போன்ற அனைத்து வேலைகளுக்கும் பயன்படுகிறது. இத்தகைய முக்கிய ஆவணமான ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
மேலும் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைப்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. அதாவது இரட்டை பெயர் பதிவு, ஒரே வாக்காளர் பெயர் பல இடங்களில் பதிவாகி இருக்கும் இது போன்ற குழப்பங்கள் ஏற்படுவதை தடுக்கவே வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் வாக்காளர் அடையாள அட்டை – ஆதார் இணைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Work From Home முறைக்கு குட்பை சொன்ன நிறுவனம் – மீண்டும் அலுவலக பணி முறை!
அந்த வகையில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு ஆதார் – வாக்காளர் அட்டை இணைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மற்ற மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் செப்டம்பர் 4ம் தேதி வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அந்த பகுதியில் நடைபெறும் இந்த சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலில் இலவசமாக இணைத்துக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு 2023 க்குள் முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்