விஜய் டிவி “பிக்பாஸ்” நிகழ்ச்சியில் களமிறங்கும் தொகுப்பாளினி பிரியங்கா – வெளியான தகவல்!!
விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்கு சீசன்கள் நிறைவடைந்து விட்டது. ஐந்தாவது சீசன் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், அதில் தொகுப்பாளினி பிரியங்கா கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் 5:
விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் (Kamal Haasan) தொகுத்து வழங்கினார். நான்காவது சீசன் முடியும் போதே, ஐந்தாவது சீசன் ஜுன் – ஜுலை மாதத்தில் துவக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி திட்டமிட்டது போல் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் கொரோனா பரவல் குறைவாக இருப்பதால் இந்த நிகழ்ச்சி இம்மாதம் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹேமாவை கலாய்த்து தள்ளிய அஞ்சலி, வெளியான படப்பிடிப்பு தள வீடியோ – குவியும் லைக்குகள்!
சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் டீசர் மற்றும் புரொமோ வெளியிடப்பட்டது. இந்த புரொமோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிகழ்ச்சியில் கனி, சுனிதா, பாபா பாஸ்கர், சார்பட்டா பரம்பரை புகழ் ஜான் விஜய், நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், மைனா நந்தினி, செய்தி வாசிப்பாளர் கண்மணி, எம்.எஸ்.பாஸ்கர், லட்சுமி ராமகிருஷ்ணன், ஜி.பி முத்து மற்றும் ஷகீலாவின் மகள் மிளா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
சிறந்த அம்மாவாக பரிசு பெறும் பாக்கியா, உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இனியா – வெளியான ப்ரோமோ!
அதுமட்டுமில்லாமல் சூப்பர் சிங்கர் உட்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி பிரியங்கா பிக்பாஸ் வீட்டிற்கு செல்கிறார் என்று சமூக வலைதளங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் இவை அனைத்தும் உறுதியான தகவல்கள் இல்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை ரசிகர்களிடம் ஆர்வம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.