முதன் முதலாக தனது திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்த விஜே மஹேஸ்வரி – ரசிகர்கள் நெகிழ்ச்சி!
தமிழ் சின்னத்திரையில் விஜேவாக பணியாற்றி வரும் மஹேஸ்வரி தனது பணி அனுபவம், வாழ்க்கை கதை என அத்தனையும் ஒரு பேட்டி ஒன்றில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.
விஜே மஹேஸ்வரி
தமிழ் தொலைக்காட்சியில் ஒரு இசை நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி பின்னாட்களில் சிறந்த நடிகையாக அறியப்பட்டவர் மஹேஸ்வரி. சன், ஜீ தமிழ், இசையருவி உள்ளிட்ட பல முன்னணி டிவி சேனல்களில் விஜேவாக பணியாற்றி வந்த இவர் விஜய் டிவியின் ‘தாயுமானவன்’ என்ற சீரியல் மூலம் ஒரு நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து சின்னத்திரை மற்றும் சினிமா திரைப்படங்களிலும் நடிகையாக வலம் வந்த இவர் ஒரு சிங்கிள் மதர் ஆவார்.
மீண்டும் புதுப்பொலிவுடன் தொடங்கும் “கனா காணும் காலங்கள்” சீரியல் – ரசிகர்கள் உற்சாகம்!
அதாவது சின்னத்திரையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ள இவரது தனிப்பட்ட வாழ்க்கை சற்று சோகமாக தான் இருந்திருக்கிறது. திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயான விஜே மஹேஸ்வரி அவரது கணவரை விட்டு பிரிந்த பின்னர் தனி ஆளாக உழைத்து, சம்பாதித்து தனது மகனை வளர்த்து வருகிறார். தற்போது 36 வயதாகி இருக்கும் விஜே மஹேஸ்வரி தனது விஜே பயணம், தனிப்பட்ட வாழ்க்கை குறித்து முதன் முறையாக பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார்.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறும் சஞ்சீவ்? வெளியான ஷாக் தகவல்!
இது குறித்து அவர் பேசும் போது, சமூக வலைதளத்தின் ஆதிக்கம் அதிகரித்ததும் தனது புகைப்படம் கூட தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து பேசவைப்பதாக மிகவும் வேதனையுடன் கூறியுள்ளார். நடிகைகள் என்றாலும் அவர்களுக்கும் தனிப்பட்ட வாழ்க்கை உண்டு என்பதை அவர்கள் நினைப்பதில்லை. பொதுவாக இருவர் கை கோர்த்து கொண்டு ஒன்றாக போகும் போது, எனக்கும் அப்படி இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆனால் என்ன செய்வது அது தலை எழுத்தில் இல்லை போல. நான் திருமணமான ஒரு வருடத்தில் அவரை விட்டு பிரிந்து விட்டேன். எனக்கு ஒரு குழந்தை இருக்கிறது.
அடுத்ததாக எனக்கு வரப்போகிறவர் எனது மகனையும் நன்றாக பார்த்து கொள்ள வேண்டும். எனது அம்மாவும் நானும் சிங்கிள் மதர் தான். என்னுடைய அப்பாவும் என் அம்மாவை விட்டு பிரிந்து சென்று விட்டார். எனக்கு அப்பாவின் அன்பு கிடைத்ததில்லை. என் மேல் எந்தவித தவறும் இல்லாத சமயத்தில் கூட எனக்கு வேலை இல்லாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அதை மறக்க விரும்புகிறேன். நான் நன்றாக நடித்தாலும் கூட, என் மேல் உள்ள சின்ன சின்ன கோபத்தினால் நிறைய வாய்ப்புகளை இழந்திருக்கிறேன். அது எனக்கு வருத்தம் தரக்கூடியதாக இருக்கிறது என்று நெகிழ்ச்சியாக குறிப்பிட்டிருக்கிறார்.