விஜே சித்ராவுக்கு ஏற்கனவே மூன்று காதலர்கள் இருந்தார்களா? ஹேம்நாத் அப்பா சொன்ன பகீர் தகவல்கள்!
மறைந்த நடிகை விஜே சித்ரா ஏற்கனவே மூன்று பேரை காதலித்ததாகவும், ஹேம்நாத் அவருக்கு நான்காவது காதலன் என்றும் அவரது மாமனார் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அளித்த புகார் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்து வழக்கில் சந்தேகத்தை உருவாக்கி இருக்கிறது.
விஜே சித்ரா
கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை சம்பந்தப்பட்ட வழக்கு மீண்டுமாக சூடு பிடிக்க துவங்கி இருக்கிறது. அதாவது, டிசம்பர் மாதம் 9ம் தேதியன்று தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு தனது காதலரும், கணவருமான ஹேம்நாத்துடன் நள்ளிரவு ஹோட்டல் அறைக்கு சென்ற விஜே சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்ததாக தகவல்கள் வெளியானது. ஆனால், விஜே சித்ராவின் மரணம் ஒரு கொலை என அவரது தாயார் சந்தேகங்களை கிளப்ப இந்த வழக்கு விசாரணைக்கு வந்து பின்னர் தற்கொலை என உறுதியானது.
நடிகை விஜே சித்ரா தற்கொலை வழக்கு – வசமாக சிக்கிய முன்னாள் எம்எல்ஏ? ரசிகர்கள் அதிர்ச்சி!
ஆனால் நடிகை சித்ராவை மரணத்திற்கு தூண்டியதாக கூறி அவரது காதலர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் இருக்கிறார். இந்த வழக்கு விசாரணையில் தான், சித்ரா அவரது காதலரை திருமணம் செய்து கொண்ட விஷயம் வெளியே தெரிய வந்தது. இப்போது சித்ரா மறைந்து ஒரு ஆண்டுக்கும் மேல் ஆகி இருக்கும் நிலையில் அவரது மரணம் தொடர்பான சில பகீர் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, சித்ராவின் இறப்பில், ஒரு முக்கிய அரசியல் புள்ளிக்கு தொடர்பு இருப்பதாக அவரது கணவர் ஹேம்நாத் போலீசில் பரபரப்பான புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
மேலும், நேரம் வரும் போது அந்த நபரின் பெயரை வெளியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னதாகவே, சித்ரா இறந்ததற்கு பிறகு பெரம்பலூர் எம்எல்ஏ ஒருவர் மீது போலீசார் சந்தேகம் கொண்டு விசாரணை செய்கையில், 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட போது சித்ராவை சந்தித்தாகவும் பின்னர் அவருடன் எந்தவொரு தொடர்பிலும் இல்லை என்று அந்த எம்எல்ஏ கூறியுள்ளார். ஆனால் இப்போது சித்ராவின் மரணத்தில் அமைச்சர் ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதாக ஹேம்நாத் கூறுகிறார்.
Exams Daily Mobile App Download
இதற்கிடையில் தனியார் தொலைக்காட்சியில் காமெடி சீரியலில் நடித்து வந்த சித்ரா அந்த சீரியலின் வசன எழுத்தாளரை காதலித்து வந்ததாகவும், இது தவிர சித்ராவுக்கு ஒருவருடன் நிச்சயதார்த்தம் முடிந்து திருமணம் நின்று போனதாகவும் அவரது மாமனார் அதாவது ஹேம்நாத்தின் அப்பா கூறி இருக்கிறார். மேலும், இந்த வழக்கில் பலருக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார். இந்த புகார்கள் எல்லாம் மீண்டும் வெளிச்சத்துக்கு வர சித்ராவின் மரணம் தொடர்பான வழக்கில் இன்னும் அவிழ்க்கப்படாத நிறைய மர்மங்கள் நீடித்திருப்பது மட்டும் தான் மிச்சம்.