நடிகை VJ சித்ரா தற்கொலைக்கு முன் இதைதான் செய்தாரா? மனம் திறந்த கணவர் ஹேம்நாத்!
பிரபல சின்னத்திரை சீரியல் நடிகை சித்ரா கடந்த ஆண்டு தற்கொலை செய்து இறப்பதற்கு முன் சில விஷயங்களை செய்ததாக கணவர் ஹேம்நாத் முதன் முறையாக மனம் திறந்துதுள்ளார். இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.
சித்ரா தற்கொலை
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சின்னத்திரை நடிகை சித்ரா. ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராக மீடியாவுக்குள் நுழைந்த நடிகை சித்ரா, பல சீரியல்களில் துணை கதாப்பாத்திரங்களில் நடித்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி ஒரு முன்னணி நடிகையாக மாறினார். அந்த வகையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லை என்ற முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த இவருக்கு மக்கள் ஏகப்பட்ட அன்பையும், ஆதரவையும் கொடுத்து வந்தனர். குறிப்பாக, மிக குறுகிய காலத்திலேயே தமிழ் மக்கள் கொண்டாடும் சின்னத்திரை நாயகியாக மாறினார் சித்ரா.
பரத்தை வைத்து குக் வித் கோமாளி செட்டே அடிக்கும் அரட்டை – ப்ரோமோ ரிலீஸ்!
இப்படி சிறிய வயதில் தனது கனவுகளை வென்று, ஒரு நடிகையாக மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த நடிகை சித்ரா கடந்த ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சீரியலிலும் சரி, நிஜ வாழ்க்கையிலும் சரி மிகவும் தைரியமான பெண்ணாக வலம் வந்த சித்ரா தற்கொலை செய்து கொண்டதை ஒருவராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்படி இருக்க, அவர் மறைந்து ஒரு வருடம் கழித்து கடந்த சில நாட்களாக நடிகை சித்ராவின் மரணம் தொடர்பான சில தகவல்கள் ஊடகங்களில் பேசப்பட்டு வர, அவரது கணவரும் சித்ராவின் மரணம் குறித்த சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘நடிகை சித்ராவின் மரணத்திற்கு நான் காரணம் இல்லை. அவரது தற்கொலைக்கு பின்னால் வேறு சிலர் இருக்கிறார்கள். அவர்கள் பெரிய அரசியல் புள்ளிகள். அவர்களிடம் இருந்து எனக்கு இப்போது அச்சுறுத்தல்கள் வந்துகொண்டிருக்கிறது. எனக்கு போலீஸ் பாதுகாப்பு அவசியம். சித்ரா தற்கொலை செய்து கொண்ட அன்று, இரவு ஷுட்டிங் முடித்துவிட்டு அறைக்கு வரும் போது கொஞ்சம் கவலையுடன் இருந்தார். அதற்கு என்ன காரணம் என்று எனக்கு தெரியும். இருந்தாலும், அவரை ஒரு வழியாக சமாளித்து விட்டு, நாங்கள் இருவரும் ஹோட்டல் ரூம் வெளியே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.
Exams Daily Mobile App Download
ஆனால், சித்ரா வருத்தத்துடன் ரூமுக்கு உள்ளே செல்வதும், வெளியே வருவதுமாக இருந்தார். பிறகு குளிக்க செல்வதாக சொல்லி விட்டு ஹோட்டல் அறையை மூடிக் கொண்டார். அவர் நீண்ட நேரம் கழித்தும் வராததால் வெளியே உட்கார்ந்திருந்த நான் அவரை கூப்பிட்டு பார்த்தேன். சத்தம் இல்லை. அதனால் ஹோட்டலில் இருக்கும் இன்னொரு சாவியை வாங்கி, நானும் ஹோட்டல் ஊழியர் ஒருவரும் அறைக்கு சென்றோம். அவர் தான் கதவை திறந்தார். அங்கு சித்ரா தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை பார்த்து அவர் கத்தியதும் தான் நான் அவரை பார்த்தேன். உடனே அவரை கீழே இறக்கி முதல் உதவி செய்தோம். ஆனால் அதற்குள் உயிர் பிரிந்து விட்டது’ என தெரிவித்துள்ளார்.