விஜே சித்ரா மறைவிற்கு காரணமாக இருந்த அரசியல் பிரமுகர் யார்? கணவர் அளித்த பகீர் புகார்!

0
விஜே சித்ரா மறைவிற்கு காரணமாக இருந்த அரசியல் பிரமுகர் யார்? கணவர் அளித்த பகீர் புகார்!
விஜே சித்ரா மறைவிற்கு காரணமாக இருந்த அரசியல் பிரமுகர் யார்? கணவர் அளித்த பகீர் புகார்!
விஜே சித்ரா மறைவிற்கு காரணமாக இருந்த அரசியல் பிரமுகர் யார்? கணவர் அளித்த பகீர் புகார்!

சின்னத்திரையில் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் செல்லப்பிள்ளையாக இருந்தவர் விஜே சித்ரா. அவர் 2 ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவருடைய கணவர் பரபரப்பு புகார் ஒன்றை தற்போது அளித்துள்ளார்.

நடிகை விஜே சித்ரா:

விஜய் டிவியில் முன்னணி சீரியலான “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கதிருக்கு ஜோடியாக முல்லையாக நடித்தவர் விஜே சித்ரா. நடுத்தரக் குடும்பத்தில் இருந்து வந்து சின்னத்திரையில் பல சேனல்களில் பணிபுரிந்து மக்கள் நாயகியாக இருந்தார். முல்லை கதிர் காதலுக்கு தனி ரசிகர் கூட்டமே இருந்தது. இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விஜே சித்ரா ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதனால் அவருடைய ரசிகர்கள் மீள முடியாத சோகத்தில் இருக்கின்றனர்.

உலக சாதனை செய்ய ஐடியா கொடுத்த எழில், பாக்கியாவை நக்கலடித்து கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

சித்ராவின் தற்கொலைக்கு அவருடைய கணவர் ஹேமந்த் தான் காரணம் என சொல்லப்பட்டு அவரை போலீசார் கைது செய்தனர். அதன் பின் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவர் ஜாமினில் வெளியே வந்தார். இந்நிலையில் தற்போது கடந்த 25 ஆம் தேதி சென்னை காவலர் அலுவலகத்தில் ஹேமந்த் புகார் ஒன்றை அளித்தார். அதில் நானும் என்னுடைய மனைவி சித்ராவும் சந்தோசமாக வாழ்ந்து வந்ததாகவும், ஆனால் என் மனைவி தற்கொலை செய்து கொள்ள காரணமாக இருந்தவர்களை நான் காட்ட வேண்டும் என்பதால் தான் இன்னும் உயிருடன் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

Exams Daily Mobile App Download

தனது மனைவியின் தற்கொலைக்கு பின்னால் பண பலமும் அரசியல் பலமும் கொண்ட மாஃபியா கும்பல் இருப்பது பலருக்கு தெரிந்த உண்மை, ஆனால் அவர்களுக்கு பயந்து அதை யாரும் வெளியே சொல்லாமல் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். மேலும் அவர்களது பண பலத்திற்கு முன்னாள் என்னை போன்ற சாதாரண மனிதனால் எதுவும் செய்ய முடியாது. என் மீது சுமத்தப்பட்ட பழியை போக்கவே நான் இன்னும் உயிரோடு வாழ்ந்து வருகிறேன் எனவும், சுப்பா ராவ், சரோஜா ராவ், மதுசூதனன், சாய் வெங்கடேஷ், யாமினி, இமானுவேல் ராஜ் உள்ளிட்ட 7 பேர் தன்னுடைய மனைவியின் சாவிற்கு காரணமாக இருந்த மாஃபியா கும்பலிடம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், அதற்கு நான் துணையாக இல்லை என்பதால் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாக அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார், அதனால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அவர் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!