மறைந்த நடிகை விஜே சித்ராவின் பிறந்தநாளில் ரசிகர்கள் செய்த காரியம் – இணையத்தில் வைரல்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் விஜே சித்ரா. அவர் கடந்த 2020ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று அவருக்கு பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் பலர் அவரது நினைவாக சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகை விஜே சித்ரா:
சின்னத்திரையில் பிரபலமான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலமாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் விஜே சித்ரா. சாதாரண குடும்பத்தை சேர்ந்த இவர் தன் திறமை மூலமாக பெரிய இடத்தை பிடித்துள்ளார். புகழின் உச்சில் இருந்த இவர் திடீரென ஹோட்டல் அறையில் தற்கொலை செய்து கொண்டார். கஷ்டப்பட்டு பல சேனல்களில் வேலை செய்து இந்த இடத்திற்கு வந்த சித்ராவின் வாழ்க்கை ஒரே நாளில் முடிந்து விட்டது.
இரவு வெளியே சென்ற கண்ணன் ஐஸ்வர்யா, முல்லையை நினைத்து சந்தோசப்படும் மூர்த்தி – இன்றைய எபிசோட்!
அவர் இறப்பு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவருடன் நடித்த பலர் இன்னும் அந்த சோகத்தில் இருந்து மீளமுடியாமல் இருக்கின்றனர். இந்நிலையில் சித்ராவிற்கு இன்று 30வது பிறந்தநாள். அவருடைய பிறந்தநாளில் அவரை நினைவு கூர்ந்து பலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் ஸ்டாலின், ஹேமா, தியா என பலர் தங்களுடைய பதிவுகள் மூலமாக சோகம் கலந்த வாழ்த்துக்களை சொல்லி இருக்கின்றனர்.
Exams Daily Mobile App Download
மேலும் விஜே சித்ராவின் ரசிகர்கள் அவர் இறந்து ஒரு வருடம் முடிவடைந்த போதும் மறக்காமல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமில்லாமல் 2 நாட்களுக்கு முன் சித்ராவின் கணவர் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அதில் சித்ராவின் மறைவிற்கு பண பலம் கொண்ட மாஃபியா கும்பல் தான் காரணம் எனவும் அதனால் என் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அவர் அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார். நான் உயிரோட இருக்க காரணமே என் மீது தவறு இல்லை என நிரூபித்து தற்கொலைக்கு சம்மந்தப்பட்டவர்களை காண்பித்து கொடுக்க தான் என அவர் தெரிவித்துள்ளார்.